tamilnadu

img

தோழர் சா. ஜீவபாரதி மறைவுக்கு அஞ்சலி

தோழர் சா. ஜீவபாரதி மறைவுக்கு அஞ்சலி 

திருவாரூர், ஜுன் 26-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், நாடகவியாளர், தஞ்சை மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் கிளை சார்பாக அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் தி.நடராஜன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்கடேசன் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் கிளைச் செயலாளர் ஆரூர் மகாலிங்கம், கிளைத் தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர். பகவன்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். கோவிந்தராஜ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கிளை தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.