வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இருந்தபோது தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மே மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த விசார ணையில் மே 23 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரித்த நிலையில், தற்போது நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை: சென்னையில் மாமியார், மருமகள் பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவல் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி மே 27 ஆம் தேதி உருவாகும் என்ப தால், மே 24 அன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதி கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மே 25 மற்றும் மே 26 ஆம் தேதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் சிவப்பு எச்ச ரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை மிகக் கன மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கோயில் நிலங்கள் மீட்பு
சென்னை: திமுக ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 19 கோயில்களில் பெருந்திட்ட வரைவுப் பணிகளுக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 2,967 கோயில்க ளில் குடமுழுக்கும் 1,800 திருமணங்களும் நடத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.7,671 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் இந்து சமய அற நிலையங்கள் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ளன என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
இன்று கடைசி நாள்
சென்னை: தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 12 ஆம் தேதி தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 24 (சனிக் கிழமை) கடைசி தேதியாகும்.
பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழ் வாராய்ச்சி நடந்துள்ளது. இங்கு ஏராளமான அரிய வகை பொருட்கள் கிடைக்கப் பெற்றன. இதேபோல தூத்துக் குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டினமருதூரில் தங்கம் கலந்த புரத நாணயங்கள், பானை ஓடு குறியீடுகள், பலதரப்பட்ட பானை ஓடுகள், தங்க ஆபரண சிதைவுகள், உலோக கழிவுகள், உறை கிணறுகள், கல் உளிகள், தெய்வத் தின் சிலைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து இங்கு அகழாய்வு மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பட்டினமருதூரில் முதல் கட்ட மாக தமிழக தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி குழு வினர் ட்ரோன் மூலம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளக் கூடிய இடங்களை அளவீடு செய்தனர். விரைவில் இங்கு அகழ்வாய்வு தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிபிக்கு நோட்டீஸ்
சென்னை: 2024 இல் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி யின்போது 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு செய்யா ததால் பலர் பாதிக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரில், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்து 4 வாரத்தில் பதில் தர ஆணையிட்டுள்ளது.
கட்டுப்பாடு ஏதும் இல்லை
சென்னை: சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் உயர்ந்திருப்பதாக ஒன்றிய அரசு தரவு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
நீலகிரி: கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் கணக் கெடுப்பு தொடங்கியுள்ளது. மே 23 முதல் மே 25 ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் சுமார் 100 வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.