ஒடிசாவில் ரயில் தடம் புரண்டது புவனேஸ்வர்
, மார்ச் 30 - ஒடிசா மாநிலம் மங்குலி அருகே கட்டாக் - நெர்குண்டி ரயில்வே பிரிவில் நெர்குண்டி நிலையம் அருகே ஞாயிற்றுக் கிழமை காலை 11.54 மணியளவில் பெங்களூரு (கர்நாடகா) - காமாக்யா (அசாம்) ஏசி அதிவிரைவு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தண்ட வாளத்தில் இருந்து இறங்கின. விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒடிசா தீய ணைப்பு சேவை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) முன்கூட்டியே கண்டறிந்ததால் ரயிலின் வேகத்தை குறைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
முதல்வர் ரம்ஜான் வாழ்த்து
சென்னை: ரம்ஜானையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள செய்தியில், “அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரம்ஜானைக் கொண்டாடும் இஸ்லா மிய சகோதர - சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோன்பு கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர - சகோதரி கள் அனைவருக்கும் திமுக தலைவர் என்ற முறையில், முதல மைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாக்கி மகிழ்கின்றேன்” என்று கூறியுள்ளார்.