tamilnadu

img

‘‘குளுகுளு குற்றாலம்’’

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினமான சனிக்கிழமையன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதமான மேகமூட்டத்துடன் லேசான தூறல் வந்து விழுந்து கொண்டிருந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிப்பதற்கு ஏதுவாக ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.

;