tamilnadu

img

நிகழாண்டு தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்

தஞ்சாவூர், ஜூன் 19-  தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணி களின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவர்  பின்னர் செய்தியாளர்களிடம் தெரி வித்தது: தஞ்சாவூருக்குத் தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரு கின்றனர். கடந்த 2018 - 19 ஆம் ஆண்டு களில் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக தஞ்சாவூருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.  நிகழாண்டு கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே  நிகழாண்டு இறுதிக்குள் தஞ்சா வூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும். சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்பு டைய தொழில் செய்து வரும்  அனை வருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது. இந்தி யாவிலேயே முதல் முறையாக, தஞ்சா வூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.  அப்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகப் பொது மேலாளர்  பாரதிதேவி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.