tamilnadu

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

புதுதில்லி, ஜன.5- முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தவேண்டும் என்று  பொது மேடையிலேயே வெறுப்புடன் பேசி,  தூண்டும் கயவர்களுக்கு எதிராகக் கடும் தண்ட னை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் அமைப்புகள் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளன. இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, தேசிய இந்திய மகளிர் சம்மேளனம் சார்பில் அனி ராஜா, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் சார்பில் கவிதா கிருஷ்ணன், பிரகதீஷீல் மகிளா சங்காதன் சார்பில் பூனம் கௌசிக், அகில இந்திய மகிளா சன்ஸ்கிரிதிக் சங்காதன் சார்பில் சபி மொகந்தி ஆகியோர் இணைந்து குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

ஓராண்டு காலத்திற்குள்ளேயே இரண்டா வது முறையாக, பெண்கள் மீது பொது மேடை யிலேயே வெறுப்பை உமிழும் நிகழ்வுகளைத் துரதிர்ஷ்டவசமாக பார்த்துவிட்டோம். முன்பு, 2021 ஜூலையில், “சள்ளி டீல்ஸ்” என்னும் பெயரில் உள்ள ஆப் (“Sully Deals” app) ஒன்று  சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தது. அதில் பிரபலமான முஸ்லிம் பெண்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் “ஏலம்” விடப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. சமூகத்தில் நிலவும் அநீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தைரியத்துடன் எழுதும் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தவும், பயமுறுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டது. அந்த சமயத்தில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்திலும், தில்லியிலும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு செயலற்றத்தன்மைக்கு, அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியும், ஏன் நீதித்துறையின் ஒரு பகுதி யும்கூட, இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிராகக் கண்டுகொள்ளாமல் வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதே  காரணம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெறுப்பை உமிழும் பேச்சுக்களாக இருந்தாலும் சரி, நேரடியாகத் தாக்குதலில் ஈடுபட்டாலும் சரி, அல்லது தொழுகை அல்லது பிரார்த்தனைக் கூட்டங்களைத் தடுத்தாலும் சரி, எங்கெல்லாம் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் காவல்துறையினர், நிர்வாகத்தி னர் மற்றும் நீதிமன்றங்களும்கூட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது மவுனமாக இருந்து விடுகிறார்கள். பல இடங்களில் இவ்வாறு சம்பவங்கள் நிகழும்போது காவல்துறையினர் நேரிடையாகவே சம்பவத்தைப் பார்த்தபோதி லும், அந்தச் சம்பவங்களில் தலையிடுவதோ, அல்லது தலையிட்டால், அவ்வாறு சிறுபான்மை யினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் கய வர்களுக்கு உதவிடும் விதத்திலும், உடந்தை யாக இருக்கும் விதத்திலுமே செயல்படு கிறார்கள். இவற்றின் விளைவாக, இவ்வாறு வெறுப்பை உமிழ்பவர்களும், வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபடுபவர்களும்  மேலும் அட்டூழியங்கள் புரிவதற்குத் தைரியமடைந்து விடுகிறார்கள்.

“சள்ளி டீல்ஸ்” ஆப் (app)புக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரண மாக, இந்த ஆண்டின் இறுதியில் இதேபோன்று  “புள்ளி பாய்” (“Bulli Bai”) என்னும் ஓர் ஆப் (app) சமூக ஊடகங்களில் காணப்படுகிறது. இதில், இஸ்மத் ஆரா, சாய்னா போன்று பிரபல மான பல முஸ்லிம் பெண்கள் “ஏலம்” விடப்படு வது பற்றி பேசியிருக்கிறது. இஸ்மத் ஆரா, தில்லியில் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். சாய்னா, வானொலிப் பிரமுகராவார். இவர்களின் பெயர்களை இந்த ஆப் குறிப்பிட்டிருப்பதோடு, இவர்களின் புகைப் படங்களையும் வெளியிட்டு இவர்கள் ஏலம் விடப்படுவார்கள் என்று கூறியிருக்கிறது.  நஜீபின் அம்மா, பாத்திமா அம்மி, பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய மோசமான நடத்தைக்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.   ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,  இத்தகைய “ஆப்”புகளை இயக்கிடும் அமைப்புகள் “தடுக்கப்பட்டுவிடும்” (“blocked”) என்று கூறியுள்ளபோதிலும்,  இது  மிகவும் வலுவற்ற ஒன்றாகும் என்பதுடன் போது மான நடவடிக்கை எனவும் கூறமுடியாது.

ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிற ஒரு நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சமத்துவமின்மையால் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளுக்கு அவர்கள் அடிக்கடி வடுப்படக்கூடிய நிலை ஏற்படு கிறது. இந்நிலையில் முஸ்லிம் பெண்களைக் குறிவைத்து, பொது மேடைகளிலேயே கேவல மாகப் பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது, சகித்துக் கொள்ளவும் கூடாது. இந்த சமீபத்திய அட்டூழியச் செய்கையானது, எத்தகைய சூழ்நிலையில் நிகழ்ந்திருக்கிறது என்று உங் களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நாடு முழுவதும் பல இடங்களில் கிறிஸ்தவர்களுக் கும், முஸ்லிம்களுக்கும் எதிராக நேரடியாகவும், மிரட்டல் தொனியுடனும் வன்முறை வெறியா ட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிற சூழ்நிலையில், பொது மேடைகளில் இந்து மதத் தலைவர்கள் எனக்கூறப்படுவோர் வெளிப் படையாகவே இவர்களுக்கு எதிராக இனப்படு கொலை தாக்குதல்கள் புரியுமாறு அழைப்பு விடுத்திருக்கும் சூழ்நிலையில் நடந்திருக் கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இவ்வாறு பேசுவதன் மூலம் ஆட்சியாளர்களால் தங்களுக்கு எவ்விதமான தண்டனையும் கிடைக்காது என்ற தைரியத்துடன் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.       பல்வேறு மாதர் அமைப்புகளைச் சார்ந்த  நாங்கள், அரசமைப்புச்சட்டத்தின் உயர்ந்த அதி காரபீடத்தில் அமர்ந்திருக்கும் நபர் என்ற முறை யில், தாங்கள் இதில் தலையிட்டு, இத்தகைய இழிவான மற்றும் கிரிமினல்தனமான நட வடிக்கையில் ஈடுபட்டோரைக் கடுமையாகத் தண்டித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.  

(ந.நி.)