சமீபத்தில் தமிழக ஆளுநர் ரவி அவர் கள் தில்லியில் லோதி தோட்டத்தில், தில்லி தமிழ் கழக பள்ளியில் அமைக் கப்பட்டுள்ள திருவள்ளுவர் திரு வுருவச் சிலையை திறந்து வைத்து பேசிய போது, தமிழ் மாணவன் என்று தன்னை அழைத்துக் கொண்ட, தமிழ் தொண்டாற்றிய திருமிகு ஜி.யூ.போப் அவர்களின் நோக்கங்களை கொச்சைப் படுத்தி பேசியிருக்கிறார். பக்தி என்பது வேண்டு மென்றே அவரது ஆங்கில மொழி பெயர்ப்பில் நீக்கப்பட் டுள்ளது என்ற பொ்ய்யா குற்றச்சாட் டினை அள்ளி வீசி யுள்ளார். உண்மை யில் சமீப காலமாக மனுதர்மமும், சனாதனமும் திருக்குறளை தன்வயப்படுத்திட துடிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து தத்துவ ஞானியும் பேராசிரியருமான தாமஸ் கார்லைல், ‘மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம் திருக்குறள்தான். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச் சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச் சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும் இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி, எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள். இத்தகைய உலகப் பொதுமறையாம் திருக்குறளை வழக்கம் போல ஸ்வீகரித்துக் கொள்ளத் துடிக்கிறது சனாதனம். திருக்குறள் போதிக்கும் சமத்துவ விழுமியங்களை விழுங்கிவிட்டு, மனுதர்ம சிந்தனையை விதைக்க முயல்கிறது.
இது ஒன்றும் புதிதல்ல
அனல் வாதம், புனல் வாதமென என வம்பிற்கு இழுத்து சமண சமூகத்தை உட்கொள்ளத் துடித்தது சனாதனம். பௌத்த மதத்தையும் உடைக்க துடித்ததையும் காலம் கண்டது. ஆனால் இன்றைக்கு தமிழ் சமூகத்தை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் பண்பாட்டை தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது சானாதனம். அதன் வாய்ஸ் தான் ஆளுநர் ரவியின் குரல். முதலில் அவர்கள் வள்ளுவனுக்கு நூல் அணிவித்து தன்வயப்படுத்த முயற்சி செய்தது. சமீபத்தில் அவருக்கு காவி உடை உடுத்தி தனதாக்கிக் கொள்ள முனைந்தது சனாதனம். இந்தியர் மட்டுமன்றி, உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு உண்டு. ஐரோப்பியத் தமிழறிஞரான , வீரமாமுனிவர் என்று அன்போடு போற்றப்படும் பெஸ்கி பாதிரியார் 1730 இல் முப்பாலான திருக்குறளின் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார். தலைசிறந்த பிரெஞ்சு மேதை எம். ஏரியல், 1848 இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில் மொழிபெயர்த் தார். அவருக்கு முன்பே 1730இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவு கூரும் அவர், திருக்குறள் பிரான்ஸ் தேசத்தின் தேசிய நூலகத்தில் இருப்பதையும் சுட்டுகிறார்.
மனங்கவரும் மாண்பு
ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த டாக்டர் கிராஸ் என்பவருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ் கற்றார். பின்னர், 1854 இல் ஜெர்மனியிலும் 1856 இல் லத்தீனிலும் மொழிபெயர்த்தார். எனினும் அதனால் திருப்தியுறாத அவர் ‘எந்த மொழிபெயர்ப்பும் மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணர முடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு கொண்ட தங்க ஆப்பிள் கனி’ என்று அறிவித்தார். தமிழ் மாணவன் என்று தம்மை அழைத்துக் கொண்ட ஜி.யு.போப், 1886இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன் வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ‘குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன் இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது’ என்று திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கிறார். இவ்வாறு திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம் மொழிகளில் அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில் 34 மொழி களில், திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன.
லத்தீன், ஜெர்மன், பிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம் ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும் வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி குழந்தைகள் மனதில் ஒற்றுமை எண்ணங்களை, சமத்துவ சிந்தனைகளை போதித்தான். ஆனால் இன்று சனாதனிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகளின் மனதில் நச்சு விதைகளை, மதப்பிரிவினைவாதத்தை, சாதியக் கொடுமைகளை போதிக்கத் துவங்கியுள்ளனர். இது திருக்குறள் சொல்லும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” என்கிற சிந்தனைக்கு நேரெதிரானது. குழந்தைகளிடம், மாணாக்கர்களிடம் நாம் சகிப்புத் தன்மையை, பன்முகத்தன்மை களைப் பற்றி விவாதிக்க வேண்டும். இதை எதிர்கொள்ள/முறியடிக்க நாம் திருக்குறள் மட்டுமல்லாது, தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளிட்ட தமிழனின் பண்பாட்டு, மொழியை பறைசாற்றும் தொன்மைகளை இத்தகைய சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இது குறித்த விவாதங்களை தெருவெங்கும், வீடெங்கும் கொண்டு செல்ல வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தகைசால் பண்பினை உயர்த்திப் பிடிப்போம். தமிழகத்தின் பன்முகத் தன்மையை போற்றி பாதுகாப்போம்.