தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை தனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 29) போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,“ போக்குவரத்துத் துறையில் சாலைப் போக்குவரத்து பிரிவு முக்கியமானதாகும்.‘மிகவும் விருப்பமான போக்குவரத்து முறையாக’ விளங்குகிறது. இந்த பிரிவில் உள்ளூர், நகரப் பகுதி, கிராமப்புற பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பகுதிகளுக்கு மக்களின் நகர்வினை எளிதாக்குவதை நோக்கமாக கொண்ட பொதுவான போக்குவரத்து முறையாகும். மேலும், சமவெளி மற்றும் மலைப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முதல் மற்றும் கடைசி மைல் இணைப்புகள் மூலம் பேருந்து வசதிகளை வழங்குகிறது” என்றார். அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது ரூ.16,146 கோடி கடனில் உள்ளது. இந்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து கள் 72 விழுக்காடு அதாவது 20,127 பேருந்துகள் 10,152 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இவற்றில் மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெண்களின் இலவசப் பயணம் 45 விழுக்காடாகும். சென்னை, மதுரை மற்றும் கோவை யில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகள் படிப்படியாக கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பின்னர் நடந்த விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் அருண் குமார் எழுப்பிய சில சந்தேகங் களுக்கு அமைச்சர் சிவசங்கர் பதி ளிக்கையில்,“அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்பட வில்லை. உள்ளூர், நகர, கிராம பகுதி களில் இயக்கப்படும் அரசுப் பேருந்து களில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள் தமிழ் நாட்டின் பொதுப் போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது”என்றார்.
பிறகு தனது பதிலுரையில், “சென்னை நகரப் பகுதிகளில் பெண் கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்புக்காக 2,500 மாநகரப் பேருந்து களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவசர காலத்தில் அழைப்பதற்காக பொத் தான் வசதியும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் புதிதாக பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் மட்டும் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ரூபாய் 2,300 கோடி ஜெர்மனி வங்கி கடன் உதவியுடன் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக தாழ்வுதளம் அமைக்கும் பிரச்சனை தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு கிடைத்ததும் உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும். தற்போது, 440 பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் ரூ.1000 கோடியில் வாங்கு வதற்கும் கூண்டுகள் கட்டுவதற்கும் ஒப்பந்தம் கோரியுள்ளது. முதற் கட்டமாக 1000 பேருந்துகள் இன்னும் இரண்டு மாத காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், போக்குவரத்து கழகத்தில் அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால ஆட்சியில் 38,399 பேர்தான் ஒட்டுநர், நடத்துநர்களாக சேர்க்கப்பட்டனர். ஆனால், இதற்கு முந்தைய திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் 48,898 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அந்த ஆட்சியின் கடைசி கட்டத்தில் புதிதாக ஆட்களை சேர்க்காததால் 2000 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை புதிதாக சேர்ப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பிரச்சனைகள் குறித்து உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், கடந்த கால அதிமுக ஆட்சி யில் அந்த தொகை வேறுவிதத்தில் முழுமையாக செலவு செய்து விட்டனர். அதனால், ஒருவருக்குகூட பணப்பலனை வழங்கவில்லை. இதனால், ஓய்வு பெறும் வயதை 58 என்பதை 60 ஆக உயர்த்தினர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகுதான் இரண்டு தவணையாக ரூ.550 கோடி வழங்கியிருக்கிறது. மீதமுள்ள தொகையும், இப்போது ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் விரைவில் பணப்பலன்கிடைக்கும். ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும் என்று தொழிலாளர்களும் தொழிற் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நியாயமான இந்த கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் மலைப் பிரதேசங்க ளுக்கும் நீடிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பிறகு புதிய அறிவிப்புகளை வெளி யிட்ட அமைச்சர், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை களில் உள்ள உணவகங்களை நடத்து வதற்கு மகளிர் சுயஉதவிக்குழுக் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணிமனைகளில் உள்ள பணியாளர் அறைகளுக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதல மைச்சர் திட்டத்தின் கீழ் பெரம்ப லூர் மாவட்டம் குன்னம் நகரில் புதிய பேருந்து பணிமனை அமைக் கப்படும். இதே திட்டத்தின் கீழ் சென்னை ஆவடியில் மாநகர் போக்கு வரத்துக் கழக பேருந்து பணிமனை மற்றும் பேருந்துநிலையம் மேம்படுத் தப்படும். அரசு விரைவு பேருந்து களில் வழக்கமாக பயணிக்கும் பயணி களுக்கு பயணச் சலுகை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.