தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 மருத்துவர் பணியிடங் கள் உட்பட 4,308 பணி யிடங்கள் வரும் செப்ட ம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்; தமிழ கத்தில் 25 ஆரம்ப சுகா தார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதி கரித்துள்ளதால், ஒகேன க்கல்லில் குளிக்கவோ, படகு சவாரிசெய்யவோ தடை விதிக்கப்பட்டுள் ளது.
பள்ளிவாசல்களை புதுப் பிப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதி கரிக்கப்பட்டு வருவ தாக மாநில சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி யில் சிக்கித் தவிக்கும் இல ங்கைக்கு, தேவையான அனைத்து உதவிகளை யும் இந்திய அரசு வழங்கும் என்று வெளி யுறவு அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.
நாட்டின் தலைநகர் தில்லியில் இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 10 ஆயி ரத்திற்ற்கும் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ள தாக தீயணைப்பு கட்டுப் பாட்டு மையம் தெரி வித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலி யுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இந்தியா உள்பட 5 நாடு களுக்கான உக்ரைன் தூதர்களை உக்ரைன் ஜனாதிபதி ஸெலென் ஸ்கி பணிநீக்கம் செய்து ள்ளார்.
போலிக் கணக்குகள் குறித்த முழு விவரங் களைத் தர மறுத்ததாகக் கூறி டிவிட்டர் நிறு வனத்தை வாங்கும் முடி வைக் கைவிடுவதாக ‘டெஸ்லா’ கார் நிறுவனத் தலைவா் எலான் மஸ்க் அறிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப் பட்டுள்ளது. புதிதாக எந்தக் குழுவும் அமர்நாத் பனிமலை குகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.