tamilnadu

img

காமராஜர் பரப்பிய கல்வி உரிமையை பாதுகாப்போம்! - கே.பாலபாரதி

அப்போது நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது . அக் கேள்வியை முன் வைத்தவர் பாரதிய ஜன சங்க எம்பி. பசு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவீர்களா? இக்கேள்விக்கு பதில் அளித்த பிரத மர் இல்லை என்றார். இதுதான் உங்கள் கட்சியின் கருத்தா என்று அந்த எம்.பி., மீண்டும் கேட்டார்.அதற்கு  எங்கள் கட்சித் தலைவரியடம் கேளுங்கள் என்றார் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. கேள்விக் கான பதிலைத் தேடி ஒரு பத்திரிகையாளர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அப்போதைய அகில இந்திய தலைவர் காமராஜரை அவரது இல்லத்தில் சந்தித்தார். பசு பாதுகாப்பு குறித்து உங்கள் கட்சியின் கருத்து என்ன என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு காமராஜரும் அவருக்கே உரித்தான பாணி யில் மிக அழுத்தம் திருத்தமாக பதில் அளித்தார் . “பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப்படறாங் கன்னேன். மனுஷனுக்கு குந்த குடிசை இல்ல. கட்ட துணி இல்ல. அடுத்த வேலை கஞ்சிக்கு ஆளா பறக்கிறான். ஆனா இவங்க பசு மாட்டை வச்சு பாலி டிக்ஸ் பண்றாங்கன்னேன். அட மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுஷனுக்கு கொடுக்கக் கூடாதான்னே... இவங்க பூர்வீகக் கதை எல்லாம் நமக்குத் தெரியாதான்னேன் இந்த வன்முறைக் கும்பல் தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது. இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலை யறாங்க? மறுபடியும் மறுபடியும் நாட்டிலே “நவ காளி” நடக்கணுமா ? எத்தனை பிரச்சனை நம்ம கண்ணு முன்னால இருக்கு ...நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டி இருக்கு ...உலக நாடுகளோட போட்டியிட்டு விஞ்ஞான யுகத்திலே வளர வேண்டி இருக்கு,... இந்த நிலைமையில இந்த ஜன சங்க ஆசாமிங்க நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துகிட்டு போறாங்கன்னேன்.”

என்ன தெளிவான அழுத்தமான கூர்மையான பதில்...அடிவயிற்றில் நெருப்புப் பற்றியதைப் போல் அடித்துப் புரண்டு வந்தது ஆர்எஸ்எஸ். பசு வதை தடைச்சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டு மென வலியுறுத்தி 1966-இல் பாரதிய ஜனசங்கம் சாதுக்களையும் சாமியார்களையும்  திரட்டி பெரும் திரளாக்கி இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் போராட்டத்தை துவக்கினார்கள். அதுபெரும் கல வரமானது.  அப்போது தலைநகரில் தங்கியிருந்த  கட்சியின் அகில இந்திய தலைவர்   காமராசர்  அவர்க ளுடைய வீட்டை குறி வைத்து தாக்கினார்கள். வீட்டிற்குநெருப்பையும் வைத்தார்கள். அன்று மதிய நேரம் என்பதால் காமராஜர் உணவருந்திய பின் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.  பாது காவ லர்கள் முயற்சியால் அன்று நூலிழையில் உயிர் தப்பி னார். இந்துத்துவ சக்திகளின் பூர்வீகத்தை அறிந்தவர் என்பதால் காமராசர் துணிந்து நின்றார்.   ஜுலை15 பெருந்தலைவர், கர்மவீரர், க‌ல்வித் தந்தை எனப் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு 120ஆவது பிறந்தநாள்.இந்நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ் நாடரசு  அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. பிற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  குடும்பத் தில் பிறந்த காமராஜர் 6ஆம்வகுப்பு வரைதான் கல்வி பெற்றிருந்தார் . சிறுவனாக இருக்கும்போதே தந்தை குமாரசாமி காலமாகி விட தாயார் சிவகாமி யம்மாள் மற்றும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார். தாய் மாமா கருப்பையா நாடார் துணிக் கடையில் சிறிது காலம் வேலை பார்த்தார். 

ஆனால் அவரது கவனமும் ஆர்வமும் இந்திய  விடுதலைப் போராட்டத்தின் மீது அந்த இளம் வயதி லேயே விழுந்தது. அன்றைய விருதுபட்டி பொட்டல் மைதானத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் கட்சி யின் பொதுக்கூட்டங்களை மிகுந்த  ஆர்வத்தோடு காமராஜர் கவனித்து வந்தார். பிள்ளையார் கோவில்  வளையல் கடை திண்ணை பொட்டல் மைதானத்தில் சிறுவர்கள் அமர்ந்து வந்தே மாதரம் கூட்டத்தைக் கேட்பார்கள். அப்போதைய காங்கிரஸ் கூட்டத்தை குழந்தைகள் வந்தே மாதரம் கூட்டம் என்று தான் அழைப்பார்கள். அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாடலை யாராவது ஒரு பாடகர் பாட அதன் பின்னால் காங்கிரஸ்காரர்களின் முழக்கமும் தொடங்கும். கேஸ் விளக்கில் கூட்டம் நடைபெறும். வேடிக்கையாக பார்க்க துவங்கி பின்னர் படிப்படி யாக அக்கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்கள் காமராஜ ரும் அவரது நண்பர்களும். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை சுதேசமித்திரன் மூலமாக பலமுறை வாசித்து கவலை கொண்டார். கழுத்தில் தமுக்கை மாட்டித் தண்டோரா போடுவது, உண்டியல் ஏந்தி நிதி வசூலித்து காங்கிரஸ் பொதுக் கூட்டங்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்குள் சென்ற போது அவரது வயது 19. இந்நடவடிக்கைகள் உறவி னர்களுக்கு அச்சமூட்டியது.வியாபாரிகள் மத்தியில் நீதிக் கட்சி வலுவாக செயல்பட்ட நிலையில் காமரா ஜர் ஒத்துழையாமை உப்புச் சத்தியாகிரகம் போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றார்.

தோழர் என்.சங்கரய்யா மாணவராக சிறைப் பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்ட போது அரு காமையில் இன்னொரு பகுதியில் காமராசர் இருந்தா ரெனவும் இராஜமுந்திரி தனிமைச் சிறையிலிருந்து சங்கரய்யா அவர்களை விடுவிக்கக் கோரி சென்னை மாகாண செயலாளருக்கு கடிதம் எழுதிய கையோடு இத்தகவலை சங்கரய்யா அவர்களுக்கு போஸ்ட் கார்டிலும் எழுதித் தெரிவித்துள்ளார் என என்.இராமகிருஷ்ணன்  எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் சோசலிஸ்ட் அமைப்பின் சார்பாக திருப்பரங்குன்றம் மொட்டயர சுப்பட்டியில் 15நாள்கள் நடந்த அரசியல் பயிற்சி முகாம் தயாரிப்புக் குழுவில் தோழர் கே.பி.ஜானகி யம்மாள் அவர்களோடு காமராசர் அவர்களும் இணைந்து  செயல்பட்டுள்ளார். 9 ஆண்டுகள் சிறையில் இருந்த காமராசர் 9 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பிலும் 4முறை எம்பி ஆகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் அகில இந்தியத் தலைவராகவும் செயல்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தோழர் பி.இராமமூர்த்தி, ப.ஜீவா னந்தம் ஆகியோர் உள்ளிட்டு எதிரும் புதிருமான அரசியலிலும் நட்போடும் பரஸ்பரம் மரியாதை உணர்வோடும் செயல்பட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு மின்உற்பத்தி போன்ற நட வடிக்கைகளில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் உதவியைப் பெற தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆலோசனை மற்றும் உதவிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டார். மக்களில் ஒருவராக எளிய தோற்றம், தனிமனித நேர்மை, மனிதநேயம், குலக்கல்வி முறையை தமது காங்கிரஸ் இயக்கம் ஆதரித்து கொண்டு வந்ததை கம்யூனிஸ்ட் இயக்கமும் திராவிட இயக்க மும் மக்களும் கடுமையாக எதிர்த்ததை புரிந்து கொண்டு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், இது ஒரு பைத்தியக்காரத் திட்டம்ன்னேன் என்று விமர்சித்த தோடு அதனை ரத்து செய்ததோடு மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறக்கச் செய்தார். மதிய உணவு, இலவச சீருடை போன்ற கல்விக்கான மறு மலர்ச்சிப் பயணத்தை இவர் துவக்கி வைத்தார். ஆசிரியர்க ளுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இன்று காமராஜரை தங்கள் அரசியல் சுயநல னுக்கு பயன்படுத்த முயல்கின்றனர். அதே இந்துத் துவா சக்திகள் மீண்டும் குலக்கல்வியான புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள்.உயர்கல்வி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. மத வெறியை முறியடிக்கவும், அனைவருக்கும் கல்வி உரிமையை பாதுகாக்கவும் போராடுவதே காமராஜ ருக்கு செய்யும் உரிய மரியாதை.