இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை தெற்கு மாசி வீதி பகுதியில் தீபாவளி பண்டிகையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து திங்களன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் குப்பைகளை அகற்றும் பணியை துவக்கி வைத்தனர். மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், மாவட்டச் செயலாளர் டி.செல்வா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சரண் , வடிவேல், தெற்கு வாசல் பகுதித் தலைவர் போனி பேஸ், மத்தியப் பகுதி செயலாளர் விக்கி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.