சின்னாளப்பட்டி, ஜன.12- பொங்கல் பண்டிகைக்காகவே பயிரிடப்பட்ட செங்கரும்புகள் வெட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீரக்கல், வக்கம் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கன்னி வாடி, பண்ணப்பட்டி, ஸ்ரீராமபுரம், அனு மராயன்கோட்டை, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டி கைக்காகவே பிரத்யேகமாக செங்கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. 12 மாதப் பயிரான செங்கரும்பு, இந்தாண்டு விவசாயிகளும் ஆர்வமு டன் அதிக பரப்பில் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சராசரியைவிட அதிக மழை பொழிவு காரணமாக நன்கு விளைந்துள்ள கரும்புகளை, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படு வதையொட்டி செங்கரும்புகள் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், சின்னாளப்பட்டி, செம்பட்டி, வத்தலக்குண்டு, நிலக் கோட்டை, கன்னிவாடி ஆகிய பகுதி களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விளைச்சலும், நல்ல விலை யும் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு ரூ.350க்கு விற்பனை யான நிலையில், இந்தாண்டு ரூ.400-முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.