tamilnadu

img

தங்கச்செயின் அணிந்ததால் தலித் இளைஞர்கள் மீது  சாதி ஆதிக்க கும்பல் வெறித் தாக்குதல்

தங்கச்செயின் அணிந்ததால் தலித் இளைஞர்கள் மீது  சாதி ஆதிக்க கும்பல் வெறித் தாக்குதல்

பொறியியல் பட்டதாரியையும் நிர்வாணப்படுத்தி அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மயிலாடுதுறை, ஜூன் 10- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் பகுதியில் தலித் இளைஞர்கள் தங்கச் செயின் அணிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சாதி ஆதிக்க கும்பல், இளைஞர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத னைத் தட்டிக்கேட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரை நிர்வாணப் படுத்தி பகல் முழுவதும் அவமானப் படுத்தி தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ விவரம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகேயுள்ள ஆரப்பள்ளம்  ஊராட்சி, நல்லூர் பகுதியையொட்டி யுள்ள நரிமுடுக்கு கிராமத்தைச் சேர்ந்த வர் தங்கராசு மகன் வினோத். பட்டிய லினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவரை, அருகேயுள்ள அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி (எனப்படும்) சரவணன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது. “நீ எப்படி எங்களை எதிர்க்க லாம்” என்று கூறி, ஜூன் 4 அன்று பகல் முழுவதும் அனுமந்தபுரம் அருகே யுள்ள ராசாவாய்க்கால் சதுரத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். செருப்பால் அடித்தும், இரும்புக் குழாயால் தாக்கி யும் காயப்படுத்தியுள்ளனர். தலை மற்றும் வயிற்றில் மிதித்து அடித்து துன்புறுத்தியதில், இடுப்பு மற்றும் கழுத்திற்குக் கீழ் காயங்கள் ஏற் பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வினோத், சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கான காரணம் கடந்த ஜூன் 1 அன்று கடைக்கண் விநாயகர் கோவில் அருகே, வினோத்தின் நண்பர்களான - பட்டிய லினத்தைச் சேர்ந்த நல்லூர் பாவட்ட மேடு கிராமத்தைச் சேர்ந்த ரவிவர்மன் (29) மற்றும் பில்படுகை வினோத் (29) ஆகியோரை, அனுமந்தபுரம் தக்காளி (எனப்படும்) சரவணன் சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளார்.  மேலும் “நீங்கள் எப்படி கழுத்தில் தங்கச் செயின் போட்டிருக்கீங்க” என்று கூறி தாக்கியதை, பொறியியல் பட்ட தாரி இளைஞரான நரிமுடுக்கு கிரா மத்தைச் சேர்ந்த வினோத் தடுத்ததே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று, பாதிக்கப்பட்ட வினோத் கண்ணீர் மல்க கூறியுள்ளார். சிபிஎம் தலைவர்கள்  கண்டனம்; ஆறுதல் தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், கொள்ளிடம் ஒன்றியச் செய லாளர் கே.கேசவன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி.மேகநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர் வினோத் தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி யுள்ளனர். உடனே கைது செய்க! இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மீது சாதிவெறித் தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாகக் கைது செய்து உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.