states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறைஇம்பால் பள்ளத்தாக்கில் மெய்டெய் சமூகத்தினர்- பாதுகாப்புப் படையினர் இடையே மோதல்

இம்பால் பள்ளத்தாக்கில் மெய்டெய் சமூகத்தினர்- பாதுகாப்புப் படையினர் இடையே மோதல்

துப்பாக்கிச்சூடு, வாகனங்கள் தீக்கிரை, பலர் படுகாயம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பாஜகவின் இழிவான அர சியலால் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. குக்கி - மெய்டெய் இனக்குழுக்களுக்கு இடையே பாஜக வன்முறையை தூண்டி விட்டதன் விளைவாக மணிப்பூர் மாநிலம் ஆப்பிரிக்காவின் வன் முறை பூமியான சோமாலியா போன்று கடுமையான அளவில் இயல்பு நிலையை இழந்து நிர்க்கதியாய் நிற்கிறது. குறிப்பாக தொடர் வன்முறையால் பாஜக ஆட்சி கவிழ்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு. எனினும் வன்முறைச் சம்ப வங்கள் இன்னும் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில், ஞாயிறன்று மெய்டெய் இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த  தலைவர்களின் ஒருவரான கனன் சிங் இம்பால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. சில மணிநேரத்திற்குப் பிறகு,”நாங்கள் தான் கைது செய்தோம்” என சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர்.

மீண்டும் வன்முறை

சிபிஐ அதிகாரிகள் அறி விப்பைத் தொடர்ந்து மெய்டெய் சமூகத்தினர்,”அரம்பாய் தெங்கோ லைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் உட்பட 5 பேரை நிபந்தனை யின்றி விடுவிக்க வேண்டும். விடுவிக்கும் வரை போராட்டம் முடி வுக்கு வராது” என அறிவித்தனர். கனன் சிங் உட்பட 5 பேரை விடு விப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் பொறுப்பா ளரான அஜய் குமார் பல்லா எதுவும் கூறவில்லை. இதனால் மெய்டெய் சமூகத்தி னர் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்பால் பள்ளத் தாக்கின் பல மாவட்டங்களில் மெய்டெய் சமூகத்தினர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் தீக்கிரை

திங்களன்று இரவு இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குராய் லாம்லாம் பகுதியில் மெய்டெய் சமூகத்தினர்களுக்கும், பாது காப்புப் படையினருக்கும் மோதல் வெடித்தன. மெய்டெய் சமூகத்தி னர் 4 மற்றும் இரு சக்கரவாகனங்க ளை எரித்து வன்முறையில் ஈடு பட்டனர். வன்முறையை ஒடுக்க வும், கூட்டத்தைக் கலைக்கவும் பாதுகாப்புப் படையினர் பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். சில இடங்களில் துப்பாக் கிச்சூடு சம்பவங்களும் நடை பெற்றதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அதே போல தௌபல், காக்சிங் மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் மற்றும் டயர்களை எரித்து போராட்டங்கள் நடை பெற்றன. திங்கள்கிழமை மாலை  இம்பால் மேற்கு மாவட்டத்தின் தேரா பகுதியிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாது காப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கு நீடித்த மோதல் ஏற்பட்டது. விஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போலில், போராட்டக்காரர்களுடனான மோதலின்போது குறைந்தது 2 காவல்துறையினருக்கு காயங் கள் ஏற்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளன.