tamilnadu

img

வாச்சாத்தி வழக்கு வெற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான சாதனை - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

“சந்தன மரங் களை உண் மையி லேயே கடத்தியவர் களையும், அந்தக்  கடத்தலில் ஈடுபட் டுள்ள பெரும் புள்ளி களையும் பாதுகாப்ப தற்காக, அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த அர சாங்கத்தின் உதவியோடு, வருவாய் அதி காரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்  றும் வனத்துறை அதிகாரிகள் என  எல்லோரும் சேர்ந்து இந்த வழக்கில்  மிகப்பெரும் நாடகம் நடத்தியிருக்கிறார் கள். ஏதும் அறியாத, கள்ளம் கபடம் அற்ற  அப்பாவி பழங்குடியினப் பெண்கள் இத னால் அடைந்த துயரம், வலி, வேதனை மிகமிக கொடுமையானது. 

ங்கம், பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண் களை பாதுகாப்பதில் அப்பட்டமாக தோல்வி அடைந்தது. அதேவேளையில், குற்றம் இழைத்த அதிகாரிகளைப் பாதுகாப்பதில்தான் குறியாக இருந்தது; மேலும், உண்மையான சந்தனக் கடத்தல்  குற்றவாளிகளை கண்டறிந்து நடவ டிக்கை எடுப்பதில் தோல்வி அடைந்தது.”  - நீதியரசர் பி.வேல்முருகன் 1992 ஜூன் 20 அன்று துவங்கி மூன்று  நாட்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம்  வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரி களால் நிகழ்த்தப்பட்ட கொடிய வன்முறை வெறியாட்டம்-பாலியல் வன்குற்றம் தொடர்பான வழக்கில் 30 ஆண்டு காலம்  நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, கிடைக்கப் பெற்றுள்ள தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் அவர்கள் குறிப்பிட்டுள்ள பல முக்கிய மான அம்சங்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது தீர்ப்பில், வாச்சாத்தி மக்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்வுப்பூர்வமாக அவர் விவரித்துள் ளார். அரசு நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துபவர்கள் இழைக்கின்ற தவறு களை மூடி மறைப்பதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளை அன்றைய அதிமுக அரசு  செய்தது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.  இந்த வழக்கில் கடைசி வரை தமிழ்  நாடு காவல்துறை தன்னுடைய தரப்பில்  ஒரு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு  செய்யவில்லை என்பது கவனிக்கத்தக் கது. இவ்வளவு பெரிய சம்பவத்தை அன்  றைக்கு மூடி மறைப்பதற்குத்தான் காவல் துறையும் அதிமுக அரசும் முயற்சிகள் மேற்கொண்டன. உயர்நீதிமன்றம் தனது நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு மிகப் பெரிய அளவிற்கு வன்கொடுமைச் சம்பவங்களும் வெறியாட்டங்களும் நடந்துள்ளன என்பதை உறுதி செய்துள்ளது. 

நேரடியாக விசாரணை நடத்திய நீதியரசர்

நீதியரசர் பி.வேல்முருகன் அவர்களே நேரடியாக வாச்சாத்தி கிராமத்திற்கு வந்து,  விரிவான விசாரணை நடத்தினார். இந்தக்  குற்றத்தை மூடி மறைப்பதற்கும் மக்க ளுக்கு நீதி கிடைத்துவிடாமல் தடுப்பதற் கும் முயற்சித்த அன்றைய அரசின் மீதும்,  ஆட்சியாளர்களின் மீதும் என்ன நட வடிக்கை என்ற கேள்வி எழுகிறது. ஆட்சி யாளர்கள் மட்டுமல்ல, இதில் சம்பந்தப் பட்ட துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ் நிலையில் உள்ளவர்கள் வரை இந்தக் குற்றத்தை கண்டும் காணாமலும் வெறும் பார்வையாளர்களாகவே இருந் தார்களே, அது ஏன்? அவர்கள் மீது என்ன  நடவடிக்கை?

இந்த கேள்விகளெல்லாம் நியாயமா னவை என்பதால்தான், நீதிபதி வேல்முரு கன் அவர்கள் தமது தீர்ப்பில், “அப்போ தைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போதிலும் சரி,  நடந்த பிறகும் சரி, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்து கிடந்ததே, அதற்கு காரணம், அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு, வாச்சாத்தி குற்றத்தை ஒட்டுமொத்தமாக மூடி மறைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டது என்பதுதான்.  இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு வன்கொடுமை இழைத்தவர்களை அடை யாளம் காட்டுகிற அடையாள அணி வகுப்பு நடந்தபோது ஆட்சி நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் மேற்கொண்ட குயுக்திகளையும் நீதிபதி பட்டியலிட்டுள் ளார். இதைப் பற்றி நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிடுகிற போது, “15.09.1995 அன்று  அடையாள அணிவகுப்பை நடத்தி முடித்த  நீதித்துறை நடுவர் அவர்கள், அடை யாள அணிவகுப்பின் போது சீருடை  அணிந்த அதிகாரிகளால் எப்படியெல் லாம் மிரட்டப்பட்டார்; கடுமையான சூழலை  எதிர்கொண்டார் என்பதை பதிவு செய் துள்ளார். ஒரு கும்பல், அணிவகுப்பு இடத்  திற்கு வந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டதை யும், தனக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு  இல்லாத நிலைமை இருந்தது என்பதை யும் விரிவான அறிக்கையாகவே சமர்ப் பித்துள்ளார்” என்று விவரித்துள்ளார்.

திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபட்டனர்

அது மட்டுமல்ல, நீதிபதி வேல்முருகன்  தமது தீர்ப்பில், கொடிய அட்டூழியத்தில் ஈடுபட்ட மூன்று துறைகளின் அதிகாரி களும், வாச்சாத்தி கிராமத்துப் பெண் களில் இளம்பெண்களாக இருந்த 18 பேரை தனித்துப் பிரித்து, அவர்கள் மீது கொடிய பாலியல் வல்லுறவு குற்றங்களை இழைத்ததை வேதனையுடன் பதிவு செய் துள்ளார். அதைப் பற்றி குறிப்பிடும் போது, “இந்த ஒட்டுமொத்த வழக்கின் ஆவணங்களையும் படிக்கும் போது, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு தனிநபர் என்ற முறையில் ஒரு தனிநபர் மீதான குற்றத்தில் ஈடுபடவில்லை; மாறாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே அரசாங்கத்தின் சீருடை அணிந்த அதி காரிகள்; காவல், வனம் மற்றும் வரு வாய்த் துறைகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “தனித்துப் பிரித்து கொடிய முறை யில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட 18 பெண்களில், ஒருவர் 13 வயது சிறுமி. மற்றொருவர் 8 மாத கர்ப்பிணி. இந்த இரு வரையும்கூட அந்த கயவர்கள் மனிதத் தன்மை யற்ற முறையில் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள்; கர்ப்பிணி யாக இருந்த பெண்ணை, கடுமையாக தாக்கி நிலைகுலையச் செய்து பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கினார்கள். குற்றம் சாட்டப் பட்டவர்கள் எதையும் நிறுத்திக் கொள்ள வில்லை. கொடிய குற்றங்களை இழைத்த தோடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்க ளையே சந்தனமரக் கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தினார்கள்” என்று குமுறலுடன் பதிவு செய்துள்ளார். இத்தனை கொடிய  குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டிய அரசு அவர்களைப் பாதுகாக்கிற அளவுக்கு தரம் தாழ்ந்து சென்றது என்பதற்கு வாச்சாத்தி வழக்கே ஓர் உதாரணம்.

குற்றவாளிக் கூண்டில் அதிமுக

இந்த வழக்கில் நேரடியாக குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும் தண்ட னையை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்றம், அன்றைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வன அலு வலர் ஆகியோரும், இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள்; எனவே அவர்க ளும் குற்றவாளிகளுக்கு உடந்தை என்ற அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்க ளின் பட்டியலிலேயே இல்லாத போதும், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அன்றைய அதிமுக அரசுக்கும், அதன் வனத் துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங் கோட்டையனுக்கும் பொருந்தும்.  வாச்சாத்தியில் நடந்த கொடுமைகளைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அன்றைய மாநிலச் செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினருமான தோழர் ஏ.நல்லசிவன் அவர்கள், அன்றைய முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு சென்றார். சட்ட மன்றத்தில் எழுப்பப்பட்டது, நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்டது. மக்கள்மன்றத் தில் வலுவான போராட்டம் நடந்தது. ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்ப தற்குப் பதிலாக இந்த வழக்கை சீர்குலைப்ப தற்குத்தான் அதிமுக அரசு முயற்சித்தது. அதன் அமைச்சர் செங்கோட்டையன், வழக்கை சீர்குலைப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும், பேரம் பேசுவதிலும் நேரடி யாகவே தலையிட்டார். இது பற்றி ஏராளமான விவரங்கள் வெளி வந்துள்ளன.  நீதிமன்றமே கூறியுள்ளபடி, அன்றைய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதிலாக குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்றது. எனவே, அதிமுகவும் அன்றைக்கு அமைச்ச ராக இருந்த செங்கோட்டையனும் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டியவர்கள்தான். அவர்கள் இப்போதா வது வாச்சாத்தி மக்களிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

30 ஆண்டுகள்  உறுதியான போராட்டம்

வாச்சாத்தி வழக்கில் 30 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கமும் எதிர்கொண்ட தடைகள்தான் எத்தனை? நடத்திய போராட்டங்கள்தான் எத்தனை? ஆட்சிகளைப் பாதுகாக்கவும் இந்த வழக்குப் பணிகளில் ஈடுபட்டுள்ள தோழர்களைப் பாதுகாக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் எத்தனை எத்தனை? அதேபோல, கட்சியும் இந்த வழக்கை நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுத்துச் சென்று 30 ஆண்டு காலமும் இடைவிடாத தொடர்ச்சி யோடு எடுத்துச் சென்றது என்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. வழக்கிற்கான நிதிதிரட்டல் உட்பட ஒவ்வொன்றிலும் மார்க்சி ஸ்ட் கட்சியின் ஒவ்வொரு தோழருக்கும் பங்கு உண்டு.  துவக்கம் முதல் கடைசி வரை இந்தப் பிரச்ச னையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டியதில் முக்கியப் பங்கு வகித்த அரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் எம்.அண்ணாமலை துவங்கி, பெ.சண்முகம், பி.டில்லிபாபு, கே.பாஷா ஜான், சி.விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, ஹெச்.ஆர்.கணேசன், பொன்னுச்சாமி மற்றும் கட்சியின் தர்மபுரி, அரூர் கமிட்டி தோழர்கள்; பாப்பா உமாநாத், மைதிலி சிவ ராமன் உட்பட ஜனநாயக மாதர் சங்க தோழர்கள், வாச்சாத்தி மக்களுக்காக நிதி திரட்டி பொருட்கள் வழங்கிய சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர்கள் உட்பட இந்த வழக்கின் வெற்றிப் பயணத்திற்கு போராடிய, பாடுபட்ட தோழர்கள் ஏராளம் ஏராளம். அவர்கள் அனைவரும் பாராட்டுத லுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். மேலும், இந்த வழக்கில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர்.வைகை, சம்கிராஜ், இளங்கோ, சுப்புராம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவின் பணியும் போற்றத்தக்கது.

வாச்சாத்தி வன்கொடுமைச் சம்பவம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடந்துள்ள எண்ணற்ற மக்கள் போராட்டங்களில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்ச னைகளில் கடைசிவரைக்கும் களத்தில் நின்று போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகிற மகத்தான இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே திகழ்கிறது என் பதை நாம் உரத்துச் சொல்ல முடியும். சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நடந்த பாலியல் வன்குற்ற வழக்காக இருந்தாலும் சரி, கம்மாபுரம் ராஜாகண்ணு லாக்-அப் கொலை வழக்காக இருந்தாலும் சரி, நாலுமூலைக்கிணறு வன்கொடுமை வழக்காக இருந்தாலும் சரி - தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாலியல் வன்குற்றங்களுக்கு உள்ளான பெண்க ளுக்காக நீதி கேட்கிற எண்ணற்ற போராட்டங்களாக இருந்தாலும் சரி - காவல் நிலையங்கள் உட்பட மனித உரிமைகள் பறிக்கப்படுகிற எந்தச் சம்பவமாக இருந்தாலும் சரி, குற்றவாளிகளை அடையா ளம் காட்டுவதற்கோ, வீதியில் நின்று போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கோ அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கோ அனைத்து  அரசியல் கட்சிகளும் களத்திற்கு வருவது இல்லை; இப்படி ஒதுங்கி இருப்பது ஜன நாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது என்றே மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.  இனியொரு வாச்சாத்தி போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, அரசியல் இயக்கங்கள் மனித உரிமைகளுக்காகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் அடித்தட்டு மக்களின் நீதிக்காகவும் குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்று இந்தத் தரு ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.