சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் ரயில் பயணத்தில் அனைவருக்கும் எழும் எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது இப்புத்தகம்.
மிக முக்கியமாக ‘தமிழில் ரயில் குறித்த விரிவான அறிமுக நூலாக’ வெளிவந்துள் ளது சிறப்பானது. தொடர்வண்டி உருவான கதையில் நீராவி என்ஜின்கள் தொடங்கி எதிர்காலத் தில் வர இருக்கும் ‘அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop)’ வரை அனைத்தும் விவரிப்பது மட்டுமின்றி அவற்றின் பின் உள்ள ‘அறிவியல்’ விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் முக்கியமான பொதுப் போக்குவரத்தான ரயில்வே எவ்வாறு இயங்குகிறது? என்பது அந்த துறையினர் தவிர மற்ற பெரும்பாலான மக்கள் அறிந்தி ருக்க வாய்ப்பில்லை.
தண்டவாளங்கள், லோக்கோமோட்டிவ், கோச் & வேகன்கள், சிக்னல், உயர் மின் அழுத்தம், கட்டுப்பாட்டு அமைப்பு, நிர்வாக அலுவலகம் என்று பல பிரிவு ரயில்வே ஊழி யர்கள்கூட மற்ற பிரிவுகள் குறித்து மிகவும் விரிவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றுக்கு விடை தரும் இந்நூல். முதல் முறையாக ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு, பயணச்சீட்டு நடைமுறை களைக் கூட விவாதித்து இருப்பது நல்ல அம்சமாகக் கருதுகிறேன். பேருந்தில் பயணம் செய்வதற்குப் பதி லாக இது போன்ற தொடர் வண்டியில் பய ணம் செய்வதால் பொதுமக்களுக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கி றது. பெருமளவு பேருந்து மற்றும் இரயில் போன்ற பொது போக்குவரத்தையே நாம் மேற்கொண்டால் எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து மீள லாம் மேலும் ‘சுற்றுச்சூழல் மாசுபாட்டை’ பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்நூல். மேலும் இருப்புப்பாதையை கேட் சாத்தி யிருக்கும் பொழுது கடப்பது தண்டனைக்கு ரிய குற்றமாகும்.
நம் மக்கள் ஏதோ சாலையை கடப்பது போன்று தொடர்வண்டி வரும் நேரத்திலும் இருப்புப் பாதையை கடப்பதை பார்க்க லாம். இதிலிருந்து நமக்கான பாடம் எக் காரணம் கொண்டும் இருப்புப்பாதையை கடக்கக்கூடாது, சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ என்ன இருக்கிறதோ அதைத் தான் நாம் பயன் படுத்தி கடக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் சமூகக் கடமை ஆகும். தொடர்வண்டி சக்கரங்கள், இருப்புப் பாதை அமைப்புக்கள் மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையை மருத்துவர் அல்ட்ராசோனிக் அலைகளைச் செலுத்தி கண்டுபிடிப்ப தைப்போல் இருப்புப் பாதையில் உள்ள தண்டவாளங்கள் விரிசல் அடையாமல் நன்றாக இருக்கின்றன என்பதை அல்ட்ரா சோனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இருப்புப்பாதை பொறியாளர்கள் கண்டு பிடிக்கின்றனர் என்பது சிறப்பாக விளக் கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டுமின்றி நிலை யத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள விபரங்களையும் விவரிக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு ரயில் நிலையமும் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைக் கூட பெயர் பல கையில் அறியமுடிகிறது என்பது போன்ற பல சுவையான செய்திகளுக்கு பஞ்ச மில்லை. ரயில்வே செய்தி மட்டுமின்றி அஞ்சல் துறை சார்ந்த செய்திகளையும் கொண்டுள் ளது இந்த புத்தகம்.
பின்கோடு முறை 1972ஆம் ஆண்டு இந்தி யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முக்கியமாக வித்திட்ட நக ரங்களில் ஒன்று நம்மூர் மதுரை. பொதுவாக ‘சக்கரத்தின் பயன்பாடுகள் அறிந்த பின்னர் ‘மனித நாகரிகம் பெரும் பாய்ச்சலில் முன்னேறியது’ என்பர் வர லாற்றியலாளர்கள். ரயில் தண்டவாளம் மற்றும் சக்க ரங்கள் குறித்தும், சக்கர அமைப்பின் அறி வியல் இயக்கம் குறித்தும் சிறப்பாக விளக்கு கிறது இந்நூல். ஆதிமுதல் சக்கரங்கள் சுழல வைக்கப் படும் முறைமை (Drives) மற்றும் மின் கடத்தல் இங்கே தொகுத்து அளிக்கப் பட்டிருக்கிறது. ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐசிஎப்ஃ பெட்டிகள் மற்றும் LHB பெட்டிகள் வேறு பாடுகள் அவை எவ்வாறு விபத்து சமயங்க ளில் உயிரிழப்புகளை குறைக்கின்றன என்று தொழில்நுட்ப காரணங்களுடன் ஆசி ரியர்கள் விளக்குவது சிறப்பானது.
அறிவியல் விளக்கங்களிடையே ரயிலில் கழிப்பறை ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு வித்தி யாசமான தகவலாக உள்ளது. பல்வேறு புகைப்படங்கள் மாணவர் களுக்கு புரிதலை மேம்படுத்தும் விதமாக உள்ளது. ரயில்வே துறை பல தொழில்நுட்ப மாற் றங்கள் அடைந்தாலும் தொழிலாளர்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் என்பது யாவ ரும் அறிந்ததே. ரயில்வேயில் எத்தனை விதமான தனித்துவமான தொழிலாளர்கள் என்று நான் வியந்ததுண்டு. ‘லட்சக்கணக்கான ரயில்வே ஊழி யர்கள் தொடர்வண்டியின் பாதுகாப்பான பயணத்திற்கு இரவு பகல் பாராது இயற் கைக்கு மாறாக ஓய்வின்றி உழைக்கி றார்கள் என்ற விவரங்கள் அனைவருக்கும் தொழிலாளர்களின் மீதான மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.’ குறிப்பாக தமிழகத்தில் நமது இளை ஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மாநில உரிமைகளை நிலைநாட்ட நாம் போராடிவரும் சூழலில் நமது இளை ஞர்களின் உள் வளத்திறமைகளை (Core Competencies) வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
இத்தருணத்தில் சிறுவர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ரயில்வே துறை சார்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கேள்வி பதில் பாணியில் விவ ரங்களைத் தொகுத்து அளித்துள்ளனர் நூலாசிரியர்கள். அவர்களின் இம்முயற்சி பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று எண்ணு கிறேன். இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் இரு வர். நமது ‘ரயில்வே லோக்கோ ஆய்வா ளர் சு.ஹரிகிருஷ்ணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியான முனைவர். பெ.சசிகுமார்.’ திரு.சசிகுமார் ஏற்கனவே ‘விண்வெளி மனிதர்கள்’, வானவாசிகள், ‘தரமே தாரக மந்திரம்’ மற்றும் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த ‘விண்ணூர்தி’ என பல புத்தகங்களை எழுதியுள்ளார். சில ஆண்டுகளுக்கு நண்பர்கள் மத்தி யில் வாசகர் வட்டம் என்ற அமைப்பு நடத்தி பல கட்டுரைகள் எழுதி வந்த ஹரி பல திற னாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முதுகலை பட்டம் மற்றும் தற்போது ஆய்வு மாணவராகத் தொடரும் ஹரி கிருஷ்ணன் இப்போது ‘எழுத்தாளராக’ உயர்ந்துள்ளார்.