நாங்குநேரி சம்பவம் பதின்ம வயதினரிடையே சாதிய வன்முறை ஆழமாக வேரூன்றிய மனநோயின் கொடூர வெளிப்பாடு! எதிர்காலம் குறித்து மனிதர்களி டம் என்றும் மிஞ்சி இருப்பது நம்பிக் கை மட்டுமே. நிகழ்காலம் துயரமான தாக இருப்பினும் நாளைய வாழ்க் கையை தாங்கக்கூடிய சிறந்த வாக்கு றுதியும் நம்பிக்கை ஒன்று தான். அத்தகைய நம்பிக்கையின் சாத்தியக் கூறுகள் மீது தொடுக்கப்படும் தாக்கு தல் மிகவும் இரக்கமற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அண்மை யில் ஒரு தலித் மாணவரும் அவரது சகோதரியும் அவருடன் பள்ளியில் பயி லும் இடைநிலை ஆதிக்க சக்தியை சார்ந்த சக மாணவர்களால் வெட்டப் பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. விளிம்பு நிலையில் வாழும் ஒரு சமூ கத்தின் முழு தலைமுறையினரையும் இது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. மாநிலத்தின் தென்கோடி பகுதி யில்,சமூகங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் அதிருப்தி யால் தூண்டப்பட்டு அவ்வப்போது வெடித்துக் கிளம்பும் பல மோதல்க ளில் இது சமீபத்தியது. தலித்துகள் மீதான வரலாற்று ரீதியிலான ஒடுக்கு முறைகளும் இப்படித்தான் தொடர் நிகழ்வாக மாறி உள்ளது. இந்த சம்ப வத்தில் வாலிபர்கள், அனைத்து சாதி இந்துக்கள், அவனது பள்ளியில் உடன்படிக்கும் மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தலித் பகுதியில் உள்ள அவர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்கி, ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுள்ளனர். தன்னை தாழ்த்தப்பட்டவன் என இடைவிடா மல் துன்புறுத்தியதாக சக மாண வர்கள் மீது புகார் கொடுத்ததற்காக அச்சிறுவனை பழிவாங்கும் வித மாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப் படுகிறது. பள்ளி நிர்வாகமும் சிறு வனைத் துன்புறுத்தியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இடைநிலை சமூ கத்தைச் சார்ந்த மூன்று பேர் ஆகஸ்ட் 9 அன்று இரண்டு பேரையும் தாக்கி யுள்ளனர். சிறுவனின் கை வெட்டப் பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரு டைய சகோதரியும் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களும் அவர்க ளது கூட்டாளிகளும் கைது செய்யப் பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாதிவெறியின் இடைவிடாத கொ டூரமும், தலைமுறை தலைமுறை யாக பாதுகாக்கப்பட்டு வரும் சாதிப் பெருமையும் தான் சாதியற்ற ஒரு சிறந்த சமுதாயம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையை வீழ்த்துகிறது. பள்ளிகளில் தலித் குழந்தைகளை மற்ற சாதியினரிடம் இருந்து வேறு படுத்தும் வகையில் சாதி கயிற்றை பயன்படுத்துவது, குறிப்பிட்ட வண்ணங்களை கொண்டு பட்டை களை கட்டச் செய்து மாணவர்களை வகைப்படுத்துவது, அடிக்கடி நடக் கும் வன்முறை மோதல்கள், உள்ளூர் அரசியல் - சாதிய சக்திக ளின் செல்வாக்கைப் பயன்படுத்தி இளைஞர்களை வேலைக்கு அமர்த் துவது ஆகியவை சாதிக் குழுக்கள் ஒரு பகுதியில் ஆழமாக வேரூன்றுவதை வெளிப்படுத்துகின்றன. தந்தை பெரியாரின் அரசியல் கோட்பாடுகளின் அடியொற்றி உரு வான திராவிட மாடல்,சாதி மேலா திக்கத்தை முறியடித்து அனைத்துப் பிரிவு மக்களையும் சமூகத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒன்றிணை க்கச் செய்யும் வகையில், ஒரே சீராக எல்லா மாவட்டங்களிலும் அமலா வதில்லை என்பது தெளிவாகிறது. சமூகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை வெடிப்புகளால் ஏற்படும் காயங்களுக்கு மேலோட்டமாக மருந்திடும் அளவிற்குத்தான் சாதி மோதலைக் கையாளும் அரசின் முயற்சிகள் இருக்கின்றன. மேலும் பிரச்சனைகளின் மூல கார ணங்களை நிவர்த்தி செய்வதற்காக எடுக்கப்படும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மிகவும் குறைவு.மாண வர்களிடையே உள்ள சாதி வேறுபாடு களைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக் கப்பட்டுள்ளது. சாதியப் படிநிலைக ளை அழித்து, அமைதி மற்றும் சமத் துவத்தை மீட்டெடுப்பதற்கு நம்பிக் கை அளிக்கும் வகையில் ஒரு கிரியா ஊக்கியாக நாங்குநேரி சம்பவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அமைய வில்லை என்றால் இறுதியில் வருத்தம் தான் மிஞ்சும்.
தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம்:21/8/23, தமிழில்: கடலூர் சுகுமாரன்