tamilnadu

img

எங்கள் உணவை பறிக்காதீர்கள்

திருவனந்தபுரம், ஜுன் 19- ‘கைக்கூப்பி வேண்டுகிறோம், எங்கள் உணவை பறிக்காதீர்கள். தற்காலிக அரசியல் லாபத்திற்காக வளைகுடா ஆட்சியாளர்களை சர்ச்சைக் குள் இழுக்காதீர்கள். இவர் கள்தான் லட்சக்கணக்கான மலை யாளிகளுக்கு உணவு வழங்கு கிறார்கள். ஷார்ஜாவின் இந்தியர் சங்கத் தலைவரும் முக்கிய காங்கிரஸ் தலைவருமான ரஹீமின் வார்த்தைகள் தான் இவை. திருவனந்தபுரத்தில் நடந்த உலக கேரள சபை மூன்றாவது அமர்வில் ரஹீம் மேலும் கூறுகையில், வளைகுடாவின் ஆட்சி யாளர்கள் நம் மீதுள்ள அன்பினால் இங்கு வருகிறார்கள். ஷார்ஜா வின் ஆட்சியாளரை கேரள முதல்வர் அழைத்தபோது, ஒன்றிய அரசின் அழைப்பிற்கு இணையான முக்கியத்துவத்துடன் பார்த்தார். கேரளாவுக்கு வந்து நான்கு நாட்கள் தங்கினார். அன்று இந்தியர் சங்கம் ஷார்ஜா சார்பாக நானும் அவருடன் சென்றேன். அன்று மூடிய அறையில் பேச்சுவார்த்தை அல்லது நெறிமுறை சந்திப்பு எதுவும் இல்லை. ஆனால், அவருக்கு பரிசு வழங்கியதாக இங்கு பிரச்சாரம் நடக்கிறது. ஷார்ஜாவின் ஆட்சியாளர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறியாத சில ஊடகங்களும் இந்த பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டன.

இந்தியர் சங்கம் ஷார்ஜாவுக்கு 1979 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்க 10 ஏக்கர் நிலத்தை அந்நாடு ஒதுக்கியது. தற்போதைய கேரள முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஷார்ஜாவின் தற்போதைய ஆட்சியாளர் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.200 கோடி செலவில் 182 கைதிகளை விடுதலை செய்துள்ளார். ரூ.14 கோடி சொந்த பணத்தில் இந்து  மயானம் கட்டினார். அதற்காக 12 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட ஆட்சியாளரைப் பற்றி தவறாகப் பேசுவது மோச மானது. தயவு செய்து அப்படிப்பட்டவரை குறை சொல்லாதீர்கள். அதற்கு ஊடகங்கள் துணைபோகக் கூடாது என்று கூறினார் காங்கிரஸ் சார்பு புலம்பெயர்ந்தோர் அமைப்பான இன்காஸ் ஷார்ஜாவின் தலைவருமான ரஹீம். நிறுவனத்தைத் தொடங்க (முதல்வரின் மகள்) லஞ்சம் கொடுத்ததாக கூறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றார். இதற்கும் உண்மைக்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்பதை நேரில் அறிந்தவன் நான். அரசியல் ஆதாயத்திற்காக லட்சக்கணக்கான மலையாளிகளுக்கு உணவளிக்கும் வளைகுடா ஆட்சியாளர்களை வம்புக்கு இழுத்தடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.