மானந்தவாடி, மார்ச் 8- காவல்துறை வேட்டையாடலின் வலி களை மறந்து வள்ளியும் நஞ்சியும் நிலத் துக்கான ஆவணத்தை மார்போடு அணைத்துக் கொண்டனர். 20 ஆண்டு களுக்கு முன்னர் துண்டு நிலத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் இவர்கள். தலா ஒரு ஏக்கர் நிலத்தை இவர்களுக்கு அரசு ஒதுக்கியது. அமைச்சர் கே.ராஜனிடம் இருந்து நில உடைமைப் பத்திரம் (பட்டா) பெற்ற போதும் முத்தங்ஙாயின் துப்பாக்கிச் சத்தம் அவர்களது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எதுவும் மறக்கப்பட வில்லை. நிலம் கிடைத்ததே அது போதும் என்று நூல்பூழா திருவண்ணூர் காலனியில் வசிக்கும் வள்ளி தன் மனநிறைவை தெரி வித்தார். இக்காலனியை சேர்ந்த நஞ்சி, பேர்ளி, சாந்தா ஆகியோர் ஒரு ஏக்கருக்கு சொந்தக்காரர் ஆனார்கள். இதன் மூலம் முத்தங்ஙா போராட் டத்தில் கலந்து கொண்ட நிலமற்ற மக்கள் அனைவருக்கும் நிலம் கிடைத்தது. அர சின் மூன்றாம் நூறு நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, முத்தங்ஙாயில் உள்ள நிலமற்ற 37 விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் செவ்வாயன்று வழங்கப்பட்டது.
புல்பள்ளி இருளத்தில் மரியநாடு காப்பி தோட்டத்தின் நிலத்தை அவர்களுக்கு பதிவு செய்து பட்டா வழங்கப்பட்டது. முத்தங்ஙா விவசாயிகள் 283 பேருக்கு நிலம் வழங்கப்பட்டது. இதில் 23 குடும் பங்களைத் தவிர மற்றவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது பினராயி அரசு கள் பட்டா வழங்கின. முத்தங்ஙா போராட்டத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு நாளில் அனைவருக்கும் நிலம் கிடைத்தது. இருபதாண்டுகளுக்குப் பிறகும், அவர் களின் கண்களில் அச்சத்தின் நிழல் உள் ளது. காவல்துறையினர் வேட்டையாடிய காயங்கள் உடம்பில் காய்ந்தாலும் மனதில் கொப்பளிக்கிறது. நிலம் கேட்டு போரா டிய பழங்குடியினர் மீது ஏ.கே.அந்தோணி யின் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த கருப்பு நாளான 2003 பிப்ர வரி 19 அன்று ஜோகி என்ற பழங்குடி யின இளைஞரும், கே.வி.வினோத் என்ற காவல் அதிகாரியும் இந்த போராட்டத் தின்போது கொல்லப்பட்டனர். போலீஸ் தனது நான்கு வயது மகள் சுமித்ராவின் தலையில் அடித்ததாக வள்ளி கூறினார். பல நாட்கள் காட்டில் அலைந்து விட்டு காலனியை அடைந்ததும் பேர்ளி நினைவுக்கு வந்தது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜோகியின் மகள் சீதாவுக்கு 2006 ஆம் ஆண்டு எல்.டி.எஃப் அரசு வரு வாய்த் துறையில் வேலையும், குடும் பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கி யது. யூடிஎப் அரசால் சுட்டு விரட்டப்பட்ட பழங்குடியினரை எல்.டி.எப் அரசு அரவணைத்துக் கொண்டது.