tamilnadu

img

மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பை காசர்கோட்டில் கேரள முதல்வர் துவக்கி வைத்தார்

காசர்கோடு,பிப்.21- கேரளாவின் கழுத்தை நெரிக்கும்  ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தலைமையில் நடத்தப்படும் மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பு காசர்கோட்டில் கோலாகலமாக தொடங்கியது. மஞ்சேஸ்வரம் தொகுதிக்குட்பட்ட கும்பளத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் அணிவகுப்பின் தலைவரிடம் கொடியை ஒப்படைத்தார். மத்தியக் குழு உறுப்பினர் சி.எஸ். சுஜாதா, மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எம்.சுவராஜ், ஜேய்க்.சி.தாமஸ், கே. டி.ஜலீல் எம்.எல்.ஏ. ஆகியோர் பிரச்சார அணிவகுப்பில் இடம்பெற்றுள்ள னர். இதை மாநிலச் செயலக உறுப்பினர் பி.கே.பிஜு நிர்வகித்து வருகிறார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காசர்கோடு மாவட்டத்தில்  5 இடங்களில் சுற்றுப்பயணம் நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் பத்தாயிரம் பேர் அணிவகுப்பார்கள்.

செந்தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். கலை  நிகழ்ச்சிகளும் அரங்கேறும். பயணக் குழு தலைவர் எம்.வி.கோவிந்தன் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு காசர்கோடு விருந்தினர் மாளிகை யில் பிரமுகர்களுடன் கலந்துரையாடு கிறார். நிறுவன  தலைவர்கள்,  தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் கலந்துகொள்வர். மாநிலத்தில் உள்ள 140 தொகுதி களிலும் அணிவகுப்பு நடத்தும் வகை யில் இந்த பயணம் திட்டமிடப் பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த தொகுதி அளவில் அணிவகுப்புக் கான  வரவேற்புக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மார்ச் 18ஆம் தேதி திருவனந்தபுரத்தில்  அணிவகுப்புடன் பிரச்சார பயணம்நிறைவடையும்.