மதுரை,டிச.16-- மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலை யில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்க ளில் வருவோர் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்ய வேண் டிய நிலை உள்ளது. சாலையில் ஆங்காங்கே விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக மன்னாடிமங்கலம் வளைவில் முழங்கால் அளவு பள்ளத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் தேங்கி இருப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மன்னாடிமங்கலம் குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் நேரில் பார்வையிட்டு விபத்து ஏற்படும் முன்பே சாலையை சீரமைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.