செங்கல்பட்டு,நவ.17- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மா. ச.முனுசாமி நவம்பர் 17 ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 82 ஆகும். ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியராக பணி யாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்தாபகத் தலைவர். ஆசிரியராக இருந்த போதிலும் மதுராந்தகம், கருங்குழி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இடது சாரி அமைப்பை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார். தோழர் மா.ச.முனுசாமிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தலைவர்கள் அஞ்சலி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நாயனார், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மதுராந்தகம் வட்டச் செய லாளர் எஸ்.ராஜா, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவா் ந. மகாலட்சுமி, செய லாளர் மு.சீனிவாசன், தமுஎகச மாவட்டத் தலைவர் சங்கர்தாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வாசு தேவன் மற்றும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர் கள் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். உடல் தானம் தோழர் மா.ச. முனு சாமியின் உடல் திங்க ளன்று (நவ.18) காலை 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட உள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தோழர் மா.ச.முனுசாமி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் தமிழகத்தில் ஆசிரியர் இயக்கத்தை முதன் முதலில் உரு வாக்கிய மாஸ்டர் இராமுண்ணி யுடன் இணைந்து செயல்பட்டார். பல்வேறு பொறுப்புகளில் திறம் படப் பணியாற்றியவர் மா.ச. முனு சாமி. தமிழ்நாட்டில் ஆசிரியர் இயக்கம் தோன்றி வளர்ந்த வர லாற்றை ‘ஆசிரியர் இயக்க வர லாற்றில் எனது நினைவலைகள்’ என்ற நூலக வெளியிட்டுள்ளார். இடதுசாரி சிந்தனைகள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.