தொலை நோக்கு பார்வை கொண்ட புத்ததேவ்
தோழர் ஜோதிபாசுவுக்கு பின்னர் முதல்வர் பதவி வகித்த புத்த தேவ் பட்டாச்சார்யா 1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி பிறந்தார். 1966ஆம் ஆண்டு கட்சியில் இணைந்த அவர் 1968 ஆம் ஆண்டு வாலிபர் சங்க மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு மாணவர் மற்றும் வாலிபர்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி னார். மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியில் சுமார் 30 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அவர் 10 ஆண்டுகள் முதல்வராகவும் செயல் பட்டார். 1985ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக்கும் 2000ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். தொலைநோக்குப் பார்வை மேற்கு வங்கத்தின் எதிர்காலம் குறித்து தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர் மென்பொருள் தயாரிப்பில் முன்னேற்றத்தை சாதித்துக் காட்டினார். அவர் கால த்தில் நலிவடைந்த பல தனியார் தொழில்கள் மீண்டும் புனரமைக்க பல முயற்சிகளை எடுத்தார். குறிப்பாக கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய இஸ்கோ எனும் இரும்பாலை மூடப்பட்டதை புனரமைக்க பல முயற்சிகள் எடுத்தார். அதனை தேசியமயமாக்கியதில் அவரது பங்கு இருந்தது. மேலும் அந்த ஆலையை புனரமைக்க ஒன்றிய அரசு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட தும் அவர் முதல்வராக இருந்த பொழுதுதான். தொழில்மய முயற்சி... நிலச்சீர்திருத்தத்தை வெற்றிகர மாக அமலாக்கிய பின்னர் தொழில் மயத்துக்கான காலம் கனிந்துள்ளது என கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு மதிப்பிட்டது. எனினும் திரிணா முல் காங்கிரஸ்/ பாஜக/ ஆர்எஸ்எஸ்/ ஜமாயத்-இ-இஸ்லாமி ஆகிய அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டம் தொழில்மயத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. அந்த வன்முறைக்கு புத்ததேவ் அரசாங்கம்தான் காரணம் என பொய்யான பிம்பத்தை உருவாக்குவ தில் எதிரிகள் வெற்றிபெற்றனர். எனி னும் வன்முறைக்கு காரணமான சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவி னர். இப்பொழுது மம்தா பானர்ஜி தான் வன்முறைக்கு காரணம் என சுவேந்துவும்; இல்லை, சுவேந்துதான் காரணம் என மம்தா பானர்ஜியும் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர். இவர்களின் சண்டையில் வெளிவந்த உண்மை அந்த வன்முறைக்கு புத்த தேவ் அரசாங்கம் காரணம் அல்ல என்பதுதான். அன்று புத்ததேவ்வை விமர்சித் தவர்கள் கூட, இன்று அவரது தொ ழில்மய தொலை நோக்கு திட்டத்தை ஏக்கத்துடன் நினைவு கூர்கின்றனர். குறிப்பாக மம்தாவின் ஆட்சியில் தொழில்மயம் ஒரு செ.மீ. கூட முன் னேற்றம் காணாத பின்னணியில் புத்ததேவ் மிகப்பெரிய மரியாதையை பெற்றுள்ளார் என முதலாளித்துவப் பத்திரிகைகளே கூற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கடைசிவரை மிக எளிமையாக வாழ்ந்த புத்ததேவ் அவர்கள் தனது 80ஆவது வயதில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் நாள் காலமானார்.