சென்னை, நவ.9- தென்மேற்கு வங்கக்கடல் பகுதி யில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப் பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறியது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக வலுப்பெற்று வரும் 12 ஆம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச் சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும்” என்று தெரிவித்திருக்கி றது. காற்றழுத்த தாழ்வு பகுதிக்காரண மாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் குறிப்பாக 13 ஆம் தேதி வரைக்கும் மிக கனமழை தொடரும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.