tamilnadu

img

பயணிகள் ரயில் கட்டண உயர்வு முடிவைக் கைவிட வேண்டும்!

பயணிகள் ரயில் கட்டண உயர்வு  முடிவைக் கைவிட வேண்டும்!

ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - ஜூலை 1 முதல் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், ஜூன் 25, 26 தேதிகளில் திருச்சிராப் பள்ளியில், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ரூ. 75 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே

ஒன்றிய பாஜக அரசு எதிர்வரும் ஜூலை 1 முதல் பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்தப் போவதாக செய்தி வெளியாகி யுள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி லக்குழு வன்மையாகக்கண்டிக்கிறது. கடந்த 2024 மற்றும் 2025 ஆண்டு வரவு - செலவில் ரயில்வே ரூபாய் 75,750 கோடி வருவாயை பயணிகள் ரயில் மூலம் ஈட்டியுள்ளது. ரயில் பயணம் மக்களின் மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. முன்பதிவு செய்யாமல் 634 கோடி பேரும், முன்பதிவு செய்து 800 கோடி பேரும் கடந்த ஓராண்டில் பயணம் செய்திருப்பது ரயிலின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.  

ரயிலை எளிய மக்கள் பயன்படுத்துவதை தடுப்பதா?

ஏற்கெனவே, இந்திய ரயில்வே துறை முதியோருக்கான கட்டண சலு கையை ரத்து செய்தது மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்தது ஆகியவை எளிய மக்களின் ரயில் பயன்பாட்டை குறைப்பதாகவும்- லாப நோக்கத்தை அதிகப் படுத்துவதாகவும் உள்ளது.  மக்களின் மிக அத்தியாவசிய தேவையில் இரண்டறக் கலந்துள்ள ரயில் பயணத்திற்கான கட்டணத்தை உயர்த்துவது, பைசா கணக்கில் இருந்தாலும் ஏற்க முடியாதது ஆகும்.  மக்கள் தலையில் சுமையை ஏற்றும்  கொள்கை என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்படி முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டு மென்றும், அனைத்துப் பகுதி மக்களும் மக்கள் மீதான பாஜக அரசின் இந்த தாக்குதலை வலுவாக எதிர்த்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.