tamilnadu

img

மதுரை, நெல்லை பேருந்து நிலையங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை,டிச.8- நெல்லை, மதுரை, தஞ்சையில் நவீனமாக மாறிய பேருந்து நிலையங்களை புதனன்று (டிச.8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து  காணொளி வாயிலாக திறந்துவைத்தார். மதுரை மாநகராட்சியில் ரூ. 55 கோடியில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள புராதான அங்காடிகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் துவக்கிவைத்தார்.

மதுரை மாநகராட்சியில் ரூ. 55 கோடியில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், மற்றும் அதன் அருகில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்ப ட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புராதான அங்காடிகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் 13 கோடியே 20 லட்சத்தில் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தம், 14 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த நடைமேடைகள்,அறிவியல் பூங்கா, மேம்படுத்தப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேலப்பாளையத்தில் அமைக்க ப்பட்ட பசுமை வளாகப் பூங்காக்களையும் திறந்து வைத்தார்.

இதேபோல், வேலூர் மாநகராட்சியில் அமைக்க ப்பட்டுள்ள 2.40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், சத்துவாச்சாரி வணிக வளாக மையம், விருப்பாச்சிபுரம், கன்னிகாபுரம்  கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டிட த்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். கொடைக்கானல், ஜெயங்கொண்டம், குளி த்தலை நகராட்சி, காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி, அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம், சூலூர் விமானப்படை தளம், அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முடிக்கப்பட்ட பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.