tamilnadu

img

தொழிலாளர்களின் போராட்டங்களை கலவரமாக பாஜக சித்தரிக்கிறது

கோயம்புத்தூர், ஜூன் 19– வேலையின்மை காரணமாக தொழிலா ளர்கள் போராட்டம் நடத்தினால் அந்த போராட் டங்களை கலவரம் போல் பாஜகவும் அதன் அமைப்புகளும் திட்டமிட்டு சித்தரிப்பதாக கே.கே.ராகவன் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேள னத்தின் 15 ஆவது மாநில மாநாட்டை சிஐடியு  அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.திவா கரன் துவக்கிவைத்து உரையாற்றினார். அப்போது கே.கே.திவாகரன் பேசுகையில், பொதுப்போக்குவரத்து திட்டமிட்டு பலவீனப் படுத்தப்படுகிறது. மாநில அரசுகள் தொடர்ந்து  போக்குவரத்துத்துறையை நடத்துமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கிரா மப்புற வழித்தடங்கள் தனியாருக்கு கொடுக்கப் படுகின்றன. இதனால் கிரமப்புறத்தில் வாழும்  எளிய மக்களுக்கு அரசின் பேருந்து சேவைகள்  பாதிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மாநிலங்களின் வருவாயை  பறித்து வருகிறது. அதேநேரத்தில் மாநிலங்க ளுக்குத்தரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகை யை தர மறுக்கிறது. இதனால் மாநில அரசுகள் கடன் பெற்று ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்  டிய நிலை உள்ளது. அதிலும் கடன் பெறு வதற்கான வரம்பை நிர்ணயித்து மாநில அரசு கடன் பெற முடியாத நிலையை ஒன்றிய அரசு திட்டமிட்டு ஏற்படுத்துகிறது.

போக்குவரத்துத் துறையில் நாடு முழுவதும் 25 கோடிப் பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தற்போது அது அரசின் விபரப்படியே 12 கோடி தான் இத்துறையில் இருக்கின்றனர். அப்படி யென்றால் 13 கோடி பேருக்கு வேலை இல்லை  அல்லது வேலையில் இருந்து விரட்டப்பட்டுள்ள னர் என்பது கண்கூடு. அவர்கள் இப்போது வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கிறார்  கள். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை தருவோம் என்கிற உறுதியை தந்த வர்கள் பாஜகவினர். இப்போது வேலையில் இருப்போர்களையும் விரட்டியடிக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசின் இந்த சூழ்ச்சிகளை யெல்லாம் பொதுமக்களிடம் நாம் கொண்டு  செல்ல வேண்டும். ஏனென்றால் வேலையின்மை யால் தெருவில் இறங்கி போராடுகிற தொழிலா ளர்கள் போராட்டங்களையெல்லாம் கலவரம் என்று பாஜகவும் அதன் அமைப்புகளும் சித்த ரிக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உண்மை யைப்போலவே பொய்யை உரக்க பேசு கிறார்கள். மோடி ரயில் நிலையத்தில 1940 களில்  டீ வீத்தவர் என்கிறார்.  ஆனால், இவர் டீ விற்றதாகச்சொல்லப்படும் ரயில்நிலையமே 1951 ஆம் ஆண்டிலோ 53 ஆம்  ஆண்டிலோதான் வந்தது. இதுபோன்று தொடர்ந்து பொய்களை உண்மையை போன்று கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இந்துக்களை ஒன்றுபடுத்துகிறோம் என்கிற பெயரில் மாற்று மத்தினரிடையே பகைமையை உருவாக்குகிறார்கள். உண்மை நிலையில் இருந்து மக்களை திசைதிருப்பும் சூழ்ச்சியை செய்கிறார்கள். இந்த நெருக்கடியான நிலையை எதிர்த்து நாம் நம்பிக்கையோடு போராட வேண்டும். சோசலிசம் அழிந்துவிட்டது என்று  தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள். அது பொய் என்று இப்போது நிருபிக்கப்பட்டு வருகிறது. அமேரிக்கா போன்ற முதலா ளித்துவ நாடுகளிலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோசலிசமே தீர்வு என்கிற  பதாகைகளை கையில் ஏந்தி போரடி வருகின்ற னர் என்பதை பார்க்கிறோம்.  ஆகவே தொழிலாளி வர்க்கம் இன்னும் ஆவே சத்துடன் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெ டுக்க வேண்டும். தொழிலாளர்கள் நமது வரு கைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை அணுக நேரம் இல்லா மல் இருக்கிறோம். நமது உறுப்பினர் எண்ணிக்  கையை உயர்த்துவதும், நமது பலத்தை அதி கரிப்பதும் மிக முக்கியமானது. அத்தகைய வலு மிக்க இயக்கமாக நமது சங்கத்தை கட்டமைக்க இந்த மாநாடு வழிகாட்டட்டும் என்றார்.