சென்னை, பிப். 22- தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றிக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத் தில் தொண்டர்களை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மக்களை எந்த நேரத்திலும் சந்திக்க தயா ராக உள்ளேன். இந்த வெற்றிக்கு காரணம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைக்காக கூட்டணி அமைத்தோம். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை யை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வந்துள்ளது. திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100 விழுக்காடு காப்பாற்றுவோம். இந்த வெற்றிக்கு காரணம் திமுக வுடன் உள்ள மதசார்பற்ற முற் போக்கு கூட்டணிதான்.
எத்தனையோ சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் செய்ய இருக்கிறோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் நமது லட்சியம். இந்த வெற்றியை ஆடம்பர மாக கொண்டாடமல், அமைதி யாக கொண்டாட வேண்டும். மக்க ளுக்காக நீங்கள் பாடுபட வேண் டும். ஏதாவது தவறு செய்தால் உட னடியாக நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை வெற்றி பெற்ற பின்னர் உறுதி எடுத்துக்கொண்டோம். எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியடைய வேண் டும். வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வில்லை என்று வருத்தப்படும்படி பணி இருக்க வேண்டும். அதிமுகவின் கோட்டையை தகர்த்து கொங்கு மண்டலத்தை கைப்பற்றியுள்ளோம். தேர்தல் வெற்றியை திமுகவினர் அமைதி யாக கொண்டாட வேண்டும். உள் ளாட்சி பிரதிநிதிகளின் பணியை தொடர்ந்து கண்காணிப்பேன். தேர்தலில் வேட்பாளர்களுக் காக பாஜகவுக்கு சில இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. அது பாஜகவுக்கான வெற்றி இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. உடன் கழக பொதுச் செயலா ளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் கள் சேகர்பாபு, ராஜகண்ணப்பன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.