சென்னை, ஜூன் 19- சென்னையில் 500க்கு மேற்பட்ட குழந்தை களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பேராசிரியர் ரேலா தலைமையிலான மருத்துவ குழு சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக தெற்காசியாவின் மிகப்பெரிய குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் ரேலா இன்ஸ்டி டூட் அன்ட் மெடிக்கல் சென்டருக்கு அங்கீ காரம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரத்தை நினைவுகூறும் வகையில் சென்னையில் நடைபெற்ற “நம்பிக்கை கொண்டாட்டம்” நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,மற்றும் ஓமன் நாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளைப் பற்றிய கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்றுத் துறை யில் சிக்கலான அறுவை சிகிச்சை பயணம் ஆகியவற்றை விவரிக்கும் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் இதில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளின் திறமைகள், திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இதில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரம ணியன் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்னும் முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சி மேற்கொண்டு தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து பேராசிரியர் ரேலாவுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த சாதனை குறித்து பேராசிரியர் ரேலா பேசுகையில், இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சவாலான ஒரு விஷயம் இல்லை என்பதை நமது அரசு மட்டு மல்ல மற்ற நாடுகளும் உணர்ந்து கொண்டி ருக்கின்றன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை வலியுறுத்துவதற்கான முயற்சி களை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகை யில், இன்று நீங்கள் பார்த்த நடன நிகழ்ச்சி களில் பங்கேற்ற குழந்தைகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகள் ஆவார்கள். இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை களின் குடும்பங்கள் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதை நீங்கள் நேரிலே பார்க்க முடி கிறது என்றார்.