உரிமைப் போராட்டம் நடத்தும் நிலைக்கு தமிழகம் இன்று தள்ளப்பட்டுள்ளது!
சென்னை, மார்ச் 5 - உரிமைப் போராட்டம் நடத்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனை உணர்த்து வதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக வும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பில் மாநில உரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் தலைமைச் செயலகத்தில், புதனன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட உள்ளது “ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற் கும் மிகப்பெரிய ஆபத்தை விளை விக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடு களை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சனைக்காக அழைத்திருக்கிறோம் என்று மன தில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதி நிதிகளுக்கும் என்னுடைய நெஞ் சார்ந்த வணக்கத்தை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்த்துவதற் காகத் தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தி ருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. 12 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும் இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில் மக்கள வைத் தொகுதிகளின் எண்ணிக் கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத் தான் செய்வார்கள். தற்போது இருக்கின்ற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நம்மு டைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்க ளவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி. க்கள் தான் இருப்பார்கள். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப் பட்டு, தற்போதைய விகிதாச்சாரத் தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட் டால், நமக்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், பத்து தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். தொகுதிகள் பற்றியதல்ல, உரிமை சார்ந்த பிரச்சனை இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இத னால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப் படும். இது வெறும் உறுப்பினர் களின் எண்ணிக்கையை பற்றிய கவ லையில்லை; நம்முடைய தமிழ்நாட் டின் உரிமை சார்ந்த கவலை. நம்முடைய தமிழ்நாடு எதிர் கொள்ளவிருக்கும் இந்த முக்கிய மான பிரச்சனையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலை வர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக் கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள்தொகை அடிப் படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக் கையை குறைத்துவிடும். தென்னிந்தியாவுக்கே ஆபத்தான செயல் எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித் தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங் களவை மற்றும் சட்டமன்றப் பேர வைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள்தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங் காற்றியுள்ள தென்மாநிலங் களுக்கு தரப்படும் தண்டனையாக தான் அமையும். இதை முன் கூட்டியே உணர்ந்துதான், கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள், தமிழ் நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியா வுக்கே அபாயமான செயல்! ஆணித்தரமாக எதிர்த்தாக வேண்டும் இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அர சியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல். இப்படி யொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல் படுத்தப்பட்டால், இந்திய அரசிய லில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப் படும். தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும். வர இருக்கும், இல்லை என்றால், எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் “மக்கள்தொகை கணக்கெடுப்பு” அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொ குதி மறு சீரமைப்பை, நாம் கடுமை யாக ஆணித்தரமாக எதிர்க்க வேண் டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.