புதுதில்லி, மே 1 - விரும்பி ஒரு மதத்தை தழு வதற்கு தனிநபருக்கு அரசி யலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி யிருக்கிறது; அதேபோல அமைதி யான முறையில் மதத்தை பரப்பு வதற்கும் அரசியலமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுக பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலை யில், விடுதியில் தங்கியிருந்தபோது பூச்சி மருந்து குடித்த இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2022 ஜனவரி அன்று உயிரிழந்தார். இதனிடையே, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்றை சங்-பரிவாரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பின. வழக்கும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
அத்துடன், பாஜக தலைவர்களில் ஒருவரான அஸ்வினி குமார் உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் ‘பொதுநலன்’ என்ற பெயரில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “கட்டாய மத மாற்றங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தக் கூடிய மதமாற்றத் தடை சட்ட வரைவை உருவாக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்துள்ளது. அதில், இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தின் 21, 25-ஆவது பிரிவுக ளின் படி ஒவ்வொரு குடிமகனும் தமக்கான மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. தங்களது மதத்தை அமைதி யான முறையில் பரப்பவும் உரிமை இருக்கிறது. எந்த ஒரு தனிநபரையும் கட்டாயமாக மதமாற்றம் செய்யக் கூடாது என்பதை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. அதேநேரத்தில் தாம் விரும்புகிற மதத்தை ஏற்கக் கூடிய உரிமையை தனிநபருக்கு அரசியல் சாசனம் வழங்கி உள்ளது. இதனை நமது அரசியல் சாசனம் தடுக்கவில்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் தங்களது மதத்தை அமைதியான முறையில் பரப்புகின்றனர். மதம் சார்ந்த நடவடிக்கைகளில் மிஷினரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக கண்டறி யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மத மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. மத மாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களிலும் இந்த சட்டம் எந்த தண்டனையையும் வழங்கி விடவில்லை. இவ்வழக்கை தாக்கல் செய்த மனுதாரர், கிறிஸ்தவ சிறு பான்மையினருக்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் என்பது பொருந்தாது. ஆகை யால் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தஞ்சை லாவண்யா மரணத்தை முன்வைத்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இவ்வழக்கு தொடரப் பட்டுள்ளது. கட்டாய மதமாற்ற நிர்பந்தத்தால் மாணவி தற்கொலை எனக் கூறுவது நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவதாகும். தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல். தஞ்சாவூர் மாணவி உயிரிழப்பு தனிப்பட்ட நிகழ்வு. இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.