ஒன்றிய அரசு தில்லியில் நடத்தும் குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் ரதத்திற்கு அனுமதி மறுத்தது. இதனை கண்டித்தும், தியாகிகளை நினைவு கூர்ந்தும் குடியரசு தினத்தன்று ரத ஊர்வலம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக மத்தியசென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். மாநில துணைச் செயலாளர் கார்த்தீஸ்குமார், மாவட்டத் தலைவர் மணிகண்டன், செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.