குழித்துறை, அக்.12- கல்குளம் விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவர் நாஞ்சில் டொமினிக் 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். கல்குளம் விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மார்த்தாண்டம் பம்மத்தில் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் 70 ரேஷன் கடைகள் 80 பணியாளர்கள் உள்ளனர். இந்த சங்கத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் டொமினிக் செயல்பட்டு வந்தார். இந்தச் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கான படிவம் எண் 16 மற்றும் 17-ஐ பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கட்டணம் ரூபாய் 110 கணக்கில் செலுத்தி விண்ணப் பிக்க வேண்டும். பின் நிர்வாக குழு கூட்டத்தில் விண்ணப் பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதி யான விண்ணப்பதாரர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை யை பின்பற்றாமல் 689 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பணம் செலுத்தியதற்கான கையொப்பமும் இல்லையாம். இது தொடர்பாக புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் சங்கத் தலைவர் நாஞ்சில் டொமினிக் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .இதற் கான உத்தரவை துணைப் பதிவாளர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார் .இதனைத் தொடர்ந்து அக்டோபர் 12 புதனன்று நடைபெறுவதாக இருந்த நிர்வாகக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது