tamilnadu

இடைநீக்கத்தை ஜாமியா மிலியா பல்கலை. ரத்து செய்ய வேண்டும்!

அமைதிவழிப் போராட்டங்களுக் காக மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கையை ஜாமியா  மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக நிர்வாகம் ரத்து செய்ய வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதா னந்தம் வலியுறுத்தியுள்ளார். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அதி காலையில் காவல்துறையால் கைது  செய்யப்பட்ட சம்பவம் நாடு முழு வதும் கடும் கண்டனங்களுக்கு உள்  ளாகியிருக்கிறது.  இந்நிலையில், திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர். சச்சிதா னந்தம் பல்கலைக்கழக துணைவேந்  தருக்கு கடிதம் எழுதி, மாணவர் களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறைந்து வரும் கருத்துச் சுதந்திரம்

 தனது கடிதத்தில், “மாணவர்  களின் அமைதிவழி போராட்டங்க ளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இடை நீக்கம் மற்றும் காவல்துறை தடுப்புக் காவல் நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறேன். பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் ஆர்வலர்களுக்கான இட மும், கருத்து சுதந்திரமும் குறைந்து  வருவது தொடர்பான கடுமையான  கேள்விகளை இந்த நடவடிக்கைகள் எழுப்புகின்றன” என்று குறிப்பிட்டுள் ளார்.

மாறுபட்ட கருத்துக்காக தண்டிப்பது சரியல்ல! “

பல்கலைக்கழகங்கள் என்பவை  பன்முகப்பட்ட கருத்துக்களுக்கும், அரசியல் ஈடுபாட்டிற்கும் என்றும் கள மாக இருந்துள்ளன. இங்கு மாறுபட்ட கருத்துக்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமல்ல, ஊக்குவிக்கப்படவும் வேண்டும். போராட்ட உரிமை என்  பது அடிப்படைச் சுதந்திரம் - இதனை  பயன்படுத்துவதற்காக மாணவர்க ளைத் தண்டிப்பது, கல்விச் சுதந்தி ரம் மற்றும் ஜனநாயக மதிப்புக ளைச் சிதைக்கிறது” என்று ஆர். சச்சி தானந்தம் எம்.பி. தெரிவித்துள்ளார்

ஆக்கப்பூர்வ உரையாடலை ஊக்குவிப்பது அவசியம்

பிப்ரவரி 12 நள்ளிரவில் இடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலை யில், பிப்ரவரி 13 அதிகாலை 5 மணி யளவில் தில்லி காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பல மாணவர்களை கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களில் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 மாணவர்களும் அடங்குவர். இந்த  நடவடிக்கையை எதிர்த்து இந்திய  மாணவர் சங்கத்தினர் கல்காஜி காவல்  நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். “கல்வி நிறுவனங்களில் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதும், ஆக்கப்பூர்வமான உரையாடலை ஊக்குவிப்பதும் முக்கியம். எனவே  மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நட வடிக்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என தனது கடி தத்தில் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.