நாகர்கோவில், ஜுன் 12- கோடை விடுமுறை கொண்டாட்ட த்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங் களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் குமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடிக்கிடந்தன. அதி லிருந்து மீண்டு வரும் நிலையில் பள்ளி கள் திறக்கப்பட்டு பின்னர் கோடை விடுமுறையும் விடப்பட்டது. இரண்டா ண்டு கால பொதுமுடக்கத்தால் முடங்கிக் கிடந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. பொரு ளாதார நெருக்கடிக்கு இடையிலும் குடும்பத்தினரின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க சுற்றுலா தலங்களுக்கு செல்வதை மக்கள் முன்னுரிமையாக கொண்டனர். தகர்ந்துபோன சிறு வியாபாரிகளுக்கு மக்கள் வருகை யால் மறுவாழ்வு கிடைத்தது.
கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஞாயிறன்று அதி காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர். பலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். குமரிமுனையில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுபோல் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாப புரம் அரண்மனை, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.