மயிலாடுதுறை, டிச.4- ‘சாதிப்பதற்கு உடலில் உள்ள ஊனம் ஒருபோதும் தடை ஆகாது’ என்பதை நிரூ பித்து சாதித்து வருகிறார் சீர்காழியை சேர்ந்த மாற் றுத்திறனாளி இளைஞர் ஒருவர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை கற்றுத் தரும் மாற்றுத்திறனாளி சிலம்ப ஆசான் விமல் பாரம் பரிய கலைகளுக்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி, மாற் றுத்திறனாளிகளுக்கு நம் பிக்கையூட்டும் அடையாள மாகவும் திகழ்கிறார். மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி புழுகாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விமல். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் இவரது இடது கைது பறிபோனது. ஒரு கையை இழந்த போதி லும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகை யிலும் கிராமத்து சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளை ஞர்களுக்கு கம்புச் சண்டை உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகளை இலவசமாக கற்றுத் தந்து கொண்டிருக்கி றார்.
தனது மூதாதையர்கள் விரும்பிய பண்டைய விளை யாட்டு முறைகளை கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பாரம் பரிய வீர கலைகளை இல வசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் இளைஞர் விமல்பெண்களுக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல் லும் இடத்திலும், தனியாக செல்லும் போது பாலியல் சீண்டல் துயரங்களால் பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக் கின்றன. அவற்றையெல் லாம் கருத்தில் கொண்டு தான், பெண் குழந்தை களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்து, அவர் களுக்குள் துணிச்சலை உருவாக்கி வருவதாக கூறு கிறார் விமல். மேலும், மாணவர்கள் இல்லங்களுக்கு சென்று இலவசமாக பாரம்பரிய விளையாட்டு முறைகளை எடுத்துக் கூறுவதை வாடிக் கையாக வைத்திருக்கிறார். மாணவர்களின் ஆரோக்கி யம், உடல் வலிமை, எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் வித மாக, மாணவர்களை தேடி அழைத்து வந்து தங்கியி ருக்கும் இடத்தின் அரு காமையிலேயே விளை யாட்டு மைதானத்தை உரு வாக்கி அதில் பண்டைய விளையாட்டு முறைகளை கற்றுக் கொடுத்து வரு கிறார்.
சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், அகனி, புத் தூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு ஊர் களைச் சேர்ந்த, பண்டைய கால வீர விளையாட்டு களில் ஆர்வம் கொண்டவர் களுக்கு சிலம்பக் கலையில் அடிப்படையான குரங்குப் பாய்ச்சல், குத்துவரிசை, புலிவரிசை, அடிமுறை சிலம் பம், போர் சிலம்பம், அலங் கார சிலம்பம், மான்கொம்பு, சுருள், வாள் வீச்சு, வாள் கேடயம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகள் அனைத்தையும் இலவச மாக கற்றுத் தருகிறார் மாற்றுத்திறனாளி இளை ஞர் விமல். தற்போது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. அரசு பள்ளியில் பயிலும் மாண வர்களுக்கு சிலம்பம் உள் ளிட்ட பாரம்பரிய கலை களை கற்றுத்தர வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி களின் வாழ்க்கையை மேம் படுத்த விமல் போன்ற இளைஞர்களை கண்டறிந்து ஊக்குவித்தால், அவர்கள் சாதித்துக் கொண்டே இருப் பார்கள்.