விருதுநகர், மே.22- தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் அஞ்சல்துறை நிர்வாகம், ஊழியர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்புக் கூட தராமல் வேலை வாங்கி வருகிறது. மேலும் 100 சதவீத தொழிலாளர்கள் இங்கு வேலை செய்யவும் நிர்பந்தம் செய்து வருகிறது. இதனைக் கண்டித்தும், அஞ்சல் துறை ஊழியர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தபால் சேவை ஊழியர்கள் பங்கேற்றனர்.