tamilnadu

img

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு  உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி

அறந்தாங்கி, ஜுன் 29-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தலைமையில் நடைபெற்றது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். மாவட்ட பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியினை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு செய்வது, பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு செய்து கொடுப்பது, அதேபோல் மாவட்ட அளவில், மாநில அளவில் இப்பள்ளியினை சிறந்த பள்ளியாக எவ்வாறு மாற்றுவது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கங்கள் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கூறினர்.  இந்நிகழ்வில், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் புஷ்பம், துணைத்தலைவர் பிரியதர்ஷினி, பள்ளி ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, கொடியரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.