tamilnadu

img

திருநங்கையர்க்கான சிறப்பு குறைதீர் முகாம்

திருநங்கையர்க்கான  சிறப்பு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை,  ஜுன் 24-  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையினை வழங்கினார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், இம்முகாமில், அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், மாவட்டத்தில் உள்ள சுமார் 80 திருநங்கைகள் கலந்துகொண்டு, ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடனுதவித் தொகைகள் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை பெறுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். மாவட்ட சமூகநல அலுவலர் மே. சியாமளா, உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) பிரசன்னா, மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்) சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.