tamilnadu

img

தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு: கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,செப்.2- திருவனந்தபுரத்தில் நடைபெற வுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ளியன்று (செப்.2) கேரளாவுக்கு சென்றார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோ பார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங் களையும் உள்ளடக்கியது தென்இந்தி யாவாகும். இந்திய ஒன்றியத்திலுள்ள மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு  1956இன் படி, இந்திய மாநிலங்களை  ஆறு மண்டலக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. தென்மண்டலக் குழுவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதே சம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும்  நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மண்டலத்திலுள்ள மாநிலங்க ளிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி, தற்போது வரை 29  தென்மண்டலக் கூட்டங்கள் நடை பெற்றுள்ளது. சனிக்கிழமை (செப். 3) அன்று  30வது கூட்டம் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நடைபெற வுள்ளது. ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில், கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ளியன்று(செப்.2)  கேரளா சென்றார். கேரள முதல்வர்  பினராயி விஜயனை சந்தித்து  முல்லைப் பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு  பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலை யத்திற்கு வருகை தந்த முதலமைச் சரை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்க ராஜ் வரவேற்றார்.