புதுதில்லி,டிச.13- புதிய வாக்காளர்களுக்காக ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை உருவாக்கி, வாக்காளர் பட்டியலை 4 தடவை புதுப்பித்து, அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை அமலுக்கு கொண்டுவர ஒன்றிய சட்ட அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ஆண்டுதோறும் புதிய வாக்கா ளர் சேர்ப்புக்கு ஜனவரி 1 ஆம் தேதி, தகுதி ஏற்படுத்தும் நாளாக (கட் ஆப்) உள்ளது. அந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்போ 18 வயது பூர்த்தியானவர் கள் மட்டுமே அந்த ஆண்டு வாக்கா ளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். ஜனவரி 2 ஆம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் அந்த ஆண்டு வாக்காளராக சேர முடியாது. இதனால் ஆண்டுக்கு 4 தகுதி ஏற் படுத்தும் நாட்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சகம் கூறுகை யில், ஆண்டுக்கு 4 தகுதி ஏற்ப டுத்தும் நாட்களை உருவாக்கி, அதிக மான வாக்காளர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என 4 நாட்கள் உருவாக்கப்படும்.
இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 14(பி) பிரிவில் திருத்தம் செய்யப்படும். இந்த திட்டம் உள்பட, தேர்தல் ஆணையத்தின் இதர சீர்திருத் தங்கள் அடங்கிய விரிவான அமைச்ச வை குறிப்பு தயாராகி வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்க ளுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு அந்தந்த மாநிலங்கள் தனி வாக்காளர் பட்டியலை பின்பற்றி வருகின்றன. ஒரே ஒரு தகுதி ஏற்படுத்தும் நாள் இருப்பதுதான் இதற்கு காரணம். எனவே, 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை உருவாக்கி, வாக்காளர் பட்டியலை 4 தடவை புதுப்பித்தால், உள்ளாட்சி தேர்தலுக்கும் மாநி லங்கள் இந்த பட்டியலை பயன் படுத்த வாய்ப்புள்ளது. அதன்மூலம் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.