tamilnadu

மதக் கலவரத்தை தடுக்க தனிச் சட்டம்: விடுதலை சிறுத்தைகள்

சென்னை,மார்ச் 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,“தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் இயற்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே கட்ட மைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய ஷாநவாஸ், “சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை தூண்டி மதக் கலவரத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை தண்டிக்க தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் பேரவைக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.