tamilnadu

img

ரூ.1,346 கோடியில் ஊரக சாலைகள் மேம்பாடு

சென்னை, ஏப்.7- தமிழ்நாட்டில் குக் கிராமங்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக 1346 கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.  பெரியகருப்பன் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வியாழனன்று (ஏப்.7) ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். விவசாயிகள், விவசாயப்  பொருட்களைச் சந்தைப் படுத்தவும், குக்கிராமங்களி லிருந்து பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளைச் சென்றடையவும், 2,750 கி.மீ நீளத்திற்கான ஓரடுக்குக் கப்பிச்சாலைகள், 800 கி.மீ நீளத்திற்கான சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் 800 கி.மீ நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகள் ஆகியவை 1346 கோடியில் அமைக்கப்படும்.  மேலும், பள்ளிகள், கல்லூரிகள், ஊரகச் சந்தைகள் மற்றும் மருத்துவ மனைகள் போன்ற அத்தி யாவசியத் தேவைகளை இணைக்கும் வகையில் 1200 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் மற்றும் 136 புதிய பாலங்கள் ரூ. 874 கோடி யில் அமைக்கப்படும்.  ஊரகப் பகுதிகளில் வீடுக ளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்து,  சுற்றுச் சூழலைப் பாது காக்க 350 கி.மீ. நீளத்திற்கு வடிகால் வசதி, 25,500 சமு தாய உறிஞ்சு குழிகள் மற்றும்  1.75 லட்சம் தனிநபர் உறிஞ்சு குழிகள் ஒன்றிய மாநில நிதிப் பங்களிப்புடன் ரூ. 431 கோடியே 39 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.  

ஜல் ஜீவன் திட்டம் மற்றும்  15வது நிதிக்குழு நிதியை  ஒருங்கிணைத்து ரூ. 1261  கோடியில் 37 மாவட்டங்க ளில் 21,728 குக்கிராமங்களில் உள்ள 12.5 லட்சம் ஊரக  வீடுகளுக்குக் குடிநீர் இணை ப்புகள் வழங்கப்படும். இணையதளம் மூலம்  சேவைகள்  ஊரகப் பகுதிகளில், பொதுமக்கள் மனைப்பிரிவு களுக்கான அனுமதி, கட்டட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறை யில்  இணையதளம் மூலம் வழங்கப்படும்.  நேரடி நியமனம் ரத்து! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப் பணிகளைச் செயல்  படுத்தும் முன்களப் பணியா ளர்களான பணி மேற்பார் வையாளர்கள் பணியிடம் பல மாவட்டங்களில் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் நேரடி நியமனத்தைத் தவிர்த்து, இனிவருங் காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும்.  சமுதாய நல்லிணக் கத்தை மேம்படுத்தும் விதமா கவும் சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக அனைத்துச் சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையில், 10 எரிவாயு தகன மேடை கள் 17.50 கோடியில் கட்டப் படும்.  புறம்போக்கு நிலத்தில்  ரூ. 14.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஊரகப் பகுதி களில் முதன் முறையாக அடு க்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். இவ்வாறு தெரிவித்தார்.