சென்னை,ஏப்.6- சென்னை மாநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ள டக்கிய பகுதிகளில் வெள்ளத் தால் ஏற்படும் பாதிப்பு களை நிரந்தரமாக தடுக்க முதல்கட்டமாக ரூ.250 கோடி யில் பணிகள் மேற்கொள்ளப் படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் புதனன்று(ஏப்.6) நீர்வள துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பை தாக் கல் செய்து பேசிய அமைச்சர் துரை முருகன்,“புதிதாக நீர் நிலைகளை உருவாக்கி வரும் நீர் வளத்துறை, ஏற் கனவே உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அதன் உள் கட்டமைப்புகளை பரா மரித்து வருகிறது” என்றார். விவசாயம் மற்றும் குடி நீர், தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறை களின் நீர் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் நீர் வளத் துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது
என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று வதுடன் அகற்றப்பட்ட பகுதி களை பாதுகாத்தும் ஆக்கிர மிப்பு நோக்கங்களை தடுத்தும் வருகிறது என்றும் கூறினார். நிலத்தடி நீரை சார்ந் துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாப்பதற்காக நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு சட்டத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர் மட்டக்குழு ஆய்வு செய் துள்ளது. அடுத்த கட்டமாக பயனீட்டாளர்கள் பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை பெறுவதற்கு அந்த வரைவுச் சட்டத்தை குறிப்பாக பொது தளத் தில் வெளியிட உத்தேசிக்கப் பட்டு உள்ளது எனவும் தெரி வித்தார். உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பிறகு பதிலளித்து பேசிய துரைமுருகன் “சென்னை மாநகரில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ங்களில் அடையாறு கொச ஸ்தலை ஆறு உபவடிநிலை களில் போரூர், புழல், செம்பரம்பாக்கம், வள்ளி வாயல், மணலி புது நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க 8 வெள்ள தடுப்பு பணி கள் முதற்கட்டமாக ரூ. 250 கோடி செலவில் மேற்கொள் ளப்படும் என்றார். போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கப்படும் என்றும் போரூர் ஏரியில் இருந்து ராமாபுரம் ஏரி வரை மூடு கால்வாய் அமைக்கும் பணி 40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கரணை அணை ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வரை பெரிய மூடு கால்வாய் அமைக்கும் பணி 58 கோடியில் மேற் கொள்ளப்படும் எனவும் தெரி வித்தார்.