திருவாரூர், செப்.21 - திருவாரூர் மாவட்டம் தைலம்மை திரையரங்கில் செப்.18 அன்று உலகத் திரைப்பட விழா தமுஎகச மற்றும் திரை இயக்கம் சார்பாக தொடங்கியது. வெள்ளியன்று நடந்த உலகத் திரைப் பட விழாவில் பங்கேற்ற திரைக்கலைஞர் ரோகிணி திரையிடல் குறித்து பேசுகை யில், “கொரோனா தொற்றின்போது சென் னையில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு பலர் சென்றனர். சென்னையில் அவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தார்களா என்பதை நினைக்க வைத்த தருணம் அது. கால்நடையாக அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதை திரைப்படமாக பார்க்கையில் நம்மையும் அறியாமல் உருக்கம் தோன்றுகிறது. திரைப்படம் உருவாக முதல் தேவை எழுத்து. நல்ல கதைக்கரு இருந்தால் சிறப்பான திரைப்படத்தை வழங்க முடியும். பொழுதுபோக்கு திரைப்படங் களில் இந்த கதைக் கருவை யாரும் சிறப் பானதாக கருதுவதில்லை. அதே நேரம், நல்ல திரைப்படங்களில் இந்த கதைக்கரு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. அண்மையில் வெளிவந்த வாழை திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் இல்லை. பிரம்மாண்டம் இல்லை. ஆனால் நம்மை சுற்றி நடக்கும் வாழ்க்கை முறையை விளக்கியிருப்பதால், அனைவரையும் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் ஏகாதசி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஐ. தமிழ்மணி, திருவாரூர் மாவட்டத் தலை வர் மு.சௌந்தரராஜன், மாவட்டச் செயலா ளர் முனைவர் ஜீ.வெங்கடேசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திரைப்பட கலைஞர் ரோகிணி மற்றும் இயக்குநர்களை பாராட்டி நினைவு சிறப்புப் பரிசு, கேடயம் வழங்கப் பட்டது.