நாமக்கல், ஜன.25 - காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும் என சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம், சிஐடியு நாமக்கல் மாவட்டக் குழு அலுவலகத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அக்ரிகேட்டர் மீட்டர் கட்ட ணத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்ப டைத்து, ஆட்டோ தொழிலை சீரழிக்கும் போக்கை கைவிட வேண்டும். அரசே நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். ஏர்போர்ட் டாக்ஸி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். காலாவதி யான சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும். ஆன்-லைன் அபராதம் என்ற முறையில் ஓட்டுநர்களை மிகவும் கேவலப்படுத்தும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்சி, இன்சூரன்ஸ் கட்ட ணங்கள் உயர்த்துவதை கைவிட வேண்டும். ஓட்டுநர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மோட்டார் தொழிலையும், தொழிலா ளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி தில்லியில் மார்ச் 25 ஆம் தேதி நடை பெற உள்ள மாபெரும் பேரணியில், தமிழகத்திலிருந்து ஏராளமான போக்கு வரத்து தொழிலாளர்களை பங்கேற்க வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.சிவாஜி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலு சாமி, மோட்டார் இன்ஜினியரிங் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ், தலைவர் எம்.ஆனந்தன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் பி. பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.