மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகம், புதுப்பொலிவு பெற்றுள்ளது. நவம்பர் 7 அன்று நடைபெற்ற புரட்சிதின விழாவில் தோழர் பி.ஆர். சிலை மற்றும் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் திறப்புவிழாவில் உற்சாகத்துடன் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். (இடது) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்க கல்வெட்டை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார். (வலது) தோழர் பி.ராமமூர்த்தி சிலையை வடிவமைத்த சிற்பி ராஜேந்திரன், கட்டிட பொறியாளர் ராஜு, உள்அரங்க வடிவமைப்பாளர் ரவி சங்கர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.