ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 28 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று சென்னை சைதாப் பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு: ஜூலை மாதம் முதல் ரயில் கட்டண உயரும் என ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு மாற்றுத்தி றனாளிகளின் பயணத்தை மேலும் கடுமை யாக்கும் என்பதால் இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். மேலும் ரயில் கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடன டியாக திரும்பப் பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவரும் மாநிலக் குழு உறுப்பினருமான ஜெயந்தி, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து, ஒரு அரசியல் நிகழ்ச்சியில் பொது வெளியில் பங்கேற்ற போது, மாற்றுத் திறனாளி பெண் என்றும் பாராமல், பாஜக குண்டர்களால் கடுமையானத் தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாஜக, கருத்து ரீதியாக மக்கள் மத்தியில் பேசுவ தற்கு பதிலாக, குண்டர்களை வைத்து தாக்குவதை எந்த வகையிலும் ஏற்க முடி யாது. பாஜக குண்டர்களின் இந்த அடாவடி செயலை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கோரிக்கைக்காக ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. தமிழகம் முழுவதும் கிராமப் புறங் களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்குவதையும், 4 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்தவும் அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.