tamilnadu

img

காதொலிக் கருவிகள் வழங்கல்

காதொலிக் கருவிகள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜுன் 16-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 607 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8000 வீதம் ரூ.16,000 மதிப்பிலான காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டது. மேலும், அ.சுப்பையா புதூர் மாநில மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் மதுரையில் ஜன 3 முதல் ஜன 5 வரை நடைபெற்ற 400 மீட்டர் தடகள போட்டியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்று, தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் பெங்களுரில் மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து, வெண்கலப்பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.