திருப்பூர், ஜன. 24 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமை யாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர், கோவை மாவட்டங் களில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்கள் உள்ளனர். இவர்களிடம் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன.நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தி யாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறி களுக்கான கூலி உயர்வு முழுமை யாகக் கிடைக்கவேயில்லை. வெகு வாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர் வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு வழிகளைத் தேடியும், இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக் களை இழந்து வாடியும் விசைத்தறி யாளர்கள் தவித்துக் கொண்டிருக் கின்றனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் பிறகு 24.11.2021 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தி யாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழி லாளர் நலத்துறை அதிகாரிகளா லும் அறிவிக்கப்பட்ட பல்லடம் இரகத்திற்கு 20 சதவிகிதத்திற்கும், சோமனூர் இரகத்திற்கு 23 சதவிகித த்திற்கும் கூலி உயர்த்தப்பட்டது. ஆனால் அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தி யாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து கடந்த 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 60 கோடி உற்பத்தி பாதிக்கப்படும். நேரடியாக இரண்டு லட்சம் மறைமுக மாக 2 லட்சம் என 4 லட்சம் தொழி லாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து திங்களன்று காரணம்பேட்டையில் ஜவுளி வியா பாரிகளை கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மங்கலம், பல்லடம், சோனூர், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியா ளர்களை கண்டித்து கண்டன முழக்கங் களை எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட னர். வரும் 27ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.